வெள்ளி, 28 மார்ச், 2014

பொடுகை விரட்டும் கூந்தல் தைலம்

கார்மேகக் கூந்தலுடன் உலாவர விரும்புகிறவர்களுக்கு கரிசலாங்கண்ணி சாறு தைலம், ஒரு வரப்பிரசாதம்! கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். 

இந்தச் சாறு - 3 கப், 
கீழா நெல்லி இலைச்சாறு - 1கப், 
பொன்னாங்கண்ணி இலைச்சாறு - 1கப், 
எலுமிச்சை சாறு - 1 கப்... 

இவற்றை 6 கப் நல்லெண்ணெயுடன் கலந்து அரை மணி நேரம் அடுப்பில் வையுங்கள். `சட சட' வென்ற ஓசை அடங்கி, தைல பதத்தில் வந்ததும், காயவைத்த நெல்லிக்காய் பவுடர் - 10 கிராமை இதில் போடுங்கள் பிறகு, அடுப்பை அனைத்து விடுங்கள். 

இந்த தைலத்தை தினமும் தலையில் தேய்த்து வர, முடி `கரு கரு'வென்று வளரத் தொடங்கும். பேன் மற்றும் பொடுகினால் அவதிப்படுகிறவர்களுக்கான ஸ்பெஷல் கரிசலாங்கண்ணி தைலம் இது. 

பச்சை கரிசலாங்கண்ணி இலை இடித்த சாறு - 2கப், 
அருகம்புல் சாறு - 2 கப், 
தேங்காய் எண்ணெய் - 2கப்.. 

இவற்றுடன் 1 கப் தேங்காய்ப் பால் கலந்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடு பண்ணுங்கள். நீர்ப்பதம் போய், தைல பதத்தில் வந்ததும் இறக்கி விடுங்கள். தினமும் தலைக்கு எண்ணெய்க்கு பதிலாக இந்த தைலத்தை தேய்த்து வாருங்கள். 

இது பொடுகையும் பேனையும் ஓட ஓட விரட்டியடிப்பதால், தலை சூப்பர் சுத்தமாகிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக