செவ்வாய், 21 செப்டம்பர், 2010

குழந்தைகளுக்கு முழங்கையில் அடிபட்டால் ? அறியவேண்டிய-7 குறிப்புகள்!!

பொதுவாக மருத்துவம் என்பது பற்றி அறிவியல்பூர்வமாக நாம் அறிந்து கொள்வது மிக அவசியம். அதுவும் நம் குழந்தைகளுக்கு என்று வரும்போது இன்னும் எச்சரிக்கை தேவை!!
குழந்தைகள் கீழே விழும்போது முழங்கை எலும்பு முறிவு ஏற்பட்டால் என்ன செய்யக்கூடாது என்ன செய்யலாம்? என்று நாம் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும்.
1.குழந்தைகளுக்கு முழங்கையில் அடிபட்டு வீக்கம், வலி காணப்பட்டால் அவசியம் எலும்பு உடைந்துள்ளதா? என்று எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்பது சிறந்தது.
2.முழங்கையில் எண்ணை, வலிக்கான களிம்புகள் போட்டு தேய்த்துவிடக் கூடாது.அப்படிச்செய்தால் முழங்கையைச் சுற்றியுள்ள தசை, சவ்வுப்பகுதிகளில் உபரியான எலும்புகள் தோன்றி முழங்கை மடக்க விடாமல் தடுக்கும். இதற்கு மயோசைடிஸ் ஆஸ்ஸிபிகன்ஸ் என்று பெயர்(Myositis ossificans) என்று பெயர்.
3.எலும்பு உடைந்திருந்தால் நாட்டு வைத்தியம் செய்யக்கூடாது. அப்படி செய்தால் கை திரும்பி இணையும் அபாயம் அதிகம்.
4.முழங்கைக்கு சற்று மேல் எலும்பு உடைந்து இருந்தாலோ அல்லது முழங்கை எலும்பு விலகி இருந்தாலோ எலும்பு மருத்துவரிடம் காண்பித்தல் அவசியம்.
5.முழங்கைக்கு சற்று மேலே உடைந்திருந்தால் பல நேரங்களில் மருத்துவரிடம் கேட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தால் அறுவை சிகிச்சை செய்து கொள்வதே மிக நல்லது.
6.முழங்கை எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் உடைந்த வித்தியாசம் தெரியாத அளவுக்கு மிகச் சரியாகப் பொறுத்த முடியும்.
7.ஏற்கெனவே முழங்கை எலும்பு உடைந்து நாட்டுக் கட்டுப் போட்டு எலும்பு தவறாக இணைந்திருந்தாலும் அதையும் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்

டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல் பற்றி அடிக்கடி செய்தித்தாள்களில் படிக்கிறோம். அதன் சில முக்கிய விபரங்க்களைப் பார்ப்போம்.

டெங்குவை பரப்பும் ஈடிஸ் கொசு- காலில் வெண்ணிறப் பட்டைகள் இருக்கும்.

1.டெங்குக் காய்ச்சல் எந்தக்கிருமியால் உண்டாகிறது?

டெங்கு ஒரு வைரஸால் உண்டாகும் காய்ச்சல் ஆகும். ஈடிஸ் (AEDIS AEGYPTI) என்ற வகைக்(பெண்) கொசு இந்த வைரசைப் பரப்புகிறது.

2.டெங்குக் காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?

  • திடீர்க் காய்ச்சல்,
  • தலைவலி,
  • தசைவலி,
  • மூட்டுவலி,
  • கண் பகுதியில் வலி
  • தோல் தடித்து சிவத்தல் (RASHES)
  • தோலில் இரத்தப் புள்ளிகள் (PETECHIAE)- இவை முதலில் கால்களிலும், நெஞ்சிலும் ஆரம்பித்து சிலருக்கு உடல் முழுதும் பரவும்.
  • வயிற்றுவலி, உமட்டல்,வாந்தி,வயிற்றுப்போக்கு
  • வாந்தியில் இரத்தம் கலந்து வருதல்

3.தீவிரமான டெங்கு காய்ச்சல் என்ன விளைவுகள் உண்டாக்கும்?

  • அதிக காய்ச்சல்
  • கண்,மூக்கு,வாய்,காது,வயிறு மற்றும் தோலில்இரத்தக்கசிவு

4.டெங்கு ஷாக் சின்ட்ரோம்-என்றால் என்ன?

  • டெங்கு இரத்தக் கசிவினால் இரத்தத்திலிருக்கும் நீரானது இரத்தக்குழாயிலிருந்து கசிந்து நுரையீரல் மற்றும் வயிற்றைச் சுற்றித் தேங்கும். இன்னிலையில் உயிரிழப்பு அதிகம்.

5.டெங்குவை கண்டறிய இரத்தப் பரிசோதனைகள் எவை?

  • இரத்தத்தில் பிளேட்லெட்டுகள் குறைதல் <100,000
  • பி.சி.ஆர் ( P C R ) பரிசோதனை

6.டெங்கு வருவதைத் தடுப்பது எப்படி?

  • கொசு உருவாகும் இடங்களான உபயோகமற்ற டிரம், டயர்,பாட்டில் ஆகியவற்றை அகற்றுதல்
  • சாக்கடை நீர் தேங்காது சுத்தப்படுத்தல்
  • கொசு மருந்தடித்தல்

பன்றிக் காய்ச்சல்- காத்துக்கொள்ள


அன்பு நண்பர்களே!!

பன்றிக்காய்ச்சலில் உலகமே பயந்து நடுங்கிக்கொண்டிருக்கும் நேரம் இது. இந்தியாவிலும் இன்றைய தினமே இரண்டு இறப்புகள் ஏற்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சலிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வது எப்படி? என்பதே இப்போதைய முக்கியமான கேள்வி. அதைப் பற்றிப் பார்ப்போம்.

1.பன்றியிலிருந்து பரவுகிறதா? என்றால் இல்லை. இது நோய் தாக்கிய மனிதர்களிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவுகிறது.

2. எப்படிப் பரவுகிறது?

சாதாரண சளி பரவுவதுபோல்தான் இதுவும் பரவுகிறது.

1.இருமல்

2.தும்மல்

3.இந்த வைரஸ் இருக்கும் பொருளின் மேல் கையை வைத்துவிட்டு வாய்,மூக்கு ஆகிய பகுதிகளைக் கையால் தொட்டால்.

3.இதன் அறிகுறிகள் என்ன?

காய்ச்சல்,சளி,இருமல்,தொண்டைக்கட்டு,மூக்கில் நீர் ஒழுகுதல், உடல்வலி, குளிர்நடுக்கம், களைப்பு.

சிகருக்கு வாந்தி,பேதி வரலாம்.

4.நோயின் வீரியம் ?

நிறையப்பேருக்கு சாதாரண காய்ச்சல், சளிபோல் வந்து செல்லும்.

கீழ்க்கண்டோருக்கு நோய் எளிதில் தொற்றும்

அ. 65 வயதுக்கு மேற்பட்டோர்.

ஆ.5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்.

இ.கர்ப்பிணிகள்

ஈ.நீரிழிவு நோயாளிகள்

உ.இதய நோயாளிகள்

ஊ.ஆஸ்துமா

எ.சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள்.

5.நோய் பரவும் காலம்?

நோய்வருவதற்கு முதல் நாளிலிருந்து, நோய் வந்த 5-7 நாட்கள் வரை. ஆயினும் குழந்தைகளுக்கும், நோய் எதிர்ப்புக்குறைபாடு உள்ளவர்களுக்கும் 7 நாள் ஆனபின்னும் நோயாளியிடமிருந்து தொற்றலாம்.

6.காத்துக்கொள்வது எப்படி?

அ. மூக்கு வாய் பகுதையை இதற்கான முகமூடியால் மூடிக்கொள்ளவும்( மருந்துக்கடைகளில் கிடைக்கும்-விலை 5 ரூபாய்க்குள்) .

ஆ.அடிக்கடி கைகளை சோப்புப் போட்டுக்கழுவவும்.

இ.கையால் கண்,மூக்கு, வாயைத் தொடாதீர்கள்.

ஈ.நோயாளியிடமிருந்து பாதுகாப்பாக விலகி இருக்கவும்.

உ.உங்கள் ஊரில் இந்நோய் உள்ளதா? நீங்கள் மேற்க்கண்டநோய்எளிதில் தொற்றும் வகையினரா? அப்படியானால் மக்கள் கூட்டமாக உள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டாம். பாதுகாப்பு முறைகளை மேற்கண்டவாறு கைகளைக் கழுவுதல், மாஸ்க் அணிதல் ஆகியவற்றைக் கடைப் பிடியுங்கள்.

ஊ.கைகளை சோப்பு&தண்ணீர் கொண்டு சோப்பு 15-20 நொடிகள் கழுவவும்.

7.குழந்தைகளுக்கு இருந்தால் கீழ்க்கண்ட நோய்க்குறிகள் இருக்கும்:

அ.மூச்சு வேகமாகவும், மூச்சு விடுவதில் சிரமமும்

ஆ.தோல் ஊதா,சாம்பல் நிறமாகுதல்.

இ.நீர் அருந்தப் பிடிக்காமல் இருத்தல்.

உ.அதிக வாந்தி

ஊ.எழுந்து நடமாடாமல் இருப்பது

எ.குழந்தை எரிச்சலுடனும், தூக்கவிடாமலும் இருப்பது.

ஏ.ஃப்ளூப் போன்ற சளி குறைந்து இருமலும் காய்ச்சலும் வருவது.

8.வயதுவந்தவர்களில் கீழ்க்கண்ட நோய்க்குறிகள் காணப்படும்:

அ. மூச்சுவிடச்சிரமம்.

ஆ.நெஞ்சுவலி, நெஞ்சில் அழுத்தமாக உணருதல்

இ.திடீரென்ற கிறுகிறுப்பு, மயக்கம்

ஈ.நிற்காத வாந்தி

உ.சளி நின்று காய்ச்சலும் , இருமலும் அதிகரித்தல்

9.எவ்வளவு நேரம் வரை இக்கிருமி உயிருடன் இருக்கும்?

தும்மல்,இருமலிலிருந்து வெளிப்பட்டு பொருட்களின்மேல் படும் கிருமி 2-8 மணிநேரம் வரை தொற்றும் தன்மையுடன் இருக்கும். அந்த நேரத்தில்.

10.இந்த கிருமி எப்போது அழியும்?

75-100 டிகிரி வெப்பத்தில் இது செயலிழக்கும்.

மேலும் பெரும்பானமையான கைகழுவ, துடைக்க உபயோகிக்கும் கிருமிநாசினிகள் இதனை செயலிழக்கச்செய்யும்.

11. வீட்டில் என்னவிதமான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்?

சாதாரண தரைகழுவும் பொருட்களால் அதில் குறிப்பிட்டபடி கழுவினால் போதும்.

12.குழாயில் வரும் நீரினால் பரவுமா?

குளோரினால் சுத்தப்படுத்தப்பட்ட கார்ப்பரேசன் தண்ணீரினால் பரவாது. இதுவரை நீரால் பரவியதாக தகவல் இல்லை.

13.நீச்சல் குளம், தண்ணீர் விளையாட்டுகள் ஆகியவற்றால் பரவுமா?

சரியாக குளோரினால் சுத்திரிக்கப்பட்ட தண்ணீரினால் பரவாது.

14.முடிவாக சில குறிப்புகள்

1.அடிக்கடி கைகளை சோப்புநீரால் கழுவவும்.

2.நன்கு 8 மணிநேரம் தூங்கவும்.

3.தண்ணீர் நிறைய அருந்தவும்.

4.காய்கறிகள், விட்டமின் சத்து மிக்க உணவை உண்ணவும்.

5.மது அருந்தவேண்டாம்.

6.உடற்பயிற்சி செய்யவும்.

7.கைகளைக் கழுவாமல் முகத்தருகில் கொண்டுசெல்லவேண்டாம்

பன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்!

பன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்!

அன்பு நண்பர்களே! பன்றிக்காய்ச்சல் பயம் மறுபடியும் பரவியுள்ளது. பன்றிக்காய்ச்சலில் இருந்து சாதாரணக்காய்ச்சலை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது பற்றி சில கருத்துக்களை உங்களுடன் பகிர்கிறேன்.

நோய்க்குறிகள்

சாதாரண சளிபன்றிக்காய்ச்சல்
.
காய்ச்சல்காய்ச்சல் பெரும்பாலும் குறைவு.80% காய்ச்சல் இருக்கும். 100 டிகிரிக்குமேல் காய்ச்சல் 3-4 நாட்களுக்கு இருக்கும்.
.
இருமல்இருமலும் நல்ல சளியும் இருக்கும்.சளியில்லாத வறட்டு இருமல் இருக்கும்.
.
உடல் வலிஉடல் வலி மிதமாக இருக்கும்.கடுமையான உடல் வலி பன்றிக்காய்ச்சலில் இருக்கும்.
.
மூக்கடைப்புமூக்கடைப்பு இருக்கும். தன்னாலேயே ஒரு வாரத்தில் சரியாகிவிடும்.
.
பன்றிக்காய்ச்சலில் மூக்கடைப்பு அரிது.
குளிர் நடுக்கம்குளிர் நடுக்கம் பெரும்பாலும் இருக்காது.
.
60% பன்றிக்காய்ச்சலில் பாதிக்கப்பட்டோருக்கு குளிர் நடுக்கம் இருக்கும்.
உடல் சோர்வுஉடல் சோர்வு குறைவாக இருக்கும்.
.
உடல் சோர்வு அதிகமாக இருக்கும்.
தும்மல்தும்மல் சாதாரணமாகக் காணப்படும்.
.
தும்மல் பன்றிக்காய்ச்சலில் காணப்படுவதில்லை.
நோய்க்குறிகள் தோன்றும் காலம்.சாதாரண சளி மெதுவாக ஆரம்பிக்கும். சில நாட்களில் அதிகமாகும்.இதன் தாக்குதல் உடனே தெரியும்.3-6 மணி நேரத்தில் அதிக காய்ச்சல், உடல் வலி,பலகீனம் ஆகியவை ஏற்படும்.
.
தலைவலிசாதாரண சளியில் தலைவலி அதிகமாக இருக்காது.பன்றிக்காய்ச்சலில் தலைவலி மிக அதிகமாக இருக்கும். 80% பேருக்கு தலைவலி இருக்கும்.
.
நெஞ்சில் பாரம்,வலிசாதாரண சளியில் நெஞ்சில் வலி, மூச்சுத்திணறல் இருக்காது.பன்றிக்காய்ச்சலில் நெஞ்சு வலி, மூச்சுத்தினறல், நெஞ்சில் கட்டை போட்டது போன்ற உணர்வு ஆகியவை இருக்கும்.

பன்றிக் காய்ச்சலுக்கும் சாதாரண சளிக்கும் உள்ள வித்தியாசங்களை மேலே கொடுத்து இருக்கிறேன்

உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி ?

உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி ?



ஞாபகம் ஒரு வியாதி , மறதி ஒரு வரம் என்று சொல்வார்கள் , ஆனால் நம் குழந்தை படித்தததை எல்லாம் மறுக்கும் போது மறதி ஒரு சாபம் போல நமக்கு தோன்றும் .


ஞாபகம் குறித்து சில தகவல்கள் :





நாம் பார்க்கும் , கேட்க்கும் , உணரும் , சுவைக்கும் , முகரும் அனைத்துமே நமது ஞாபகங்கள் ஆகும் . இது முதலில் முதலில் குறைந்த நேரமே மனதில் இருக்கும் (சென்சரி மெமரி ). உடனே மறந்து விடும் .


இந்த சென்சரி மெமரியில் நாம் முழு கவனத்தை செலுத்தி ஆழ்ந்து கவனித்தால் அது ஷார்ட் டெர்ம் மெமரி ஆக பதிவாகும் .இதுவும் சில மணித்துளிகளுக்கு மட்டும் இருக்கும் .


ஷார்ட் டெர்ம் மெமரி ஐ திரும்ப திரும்ப செய்யும்போது அது நாள் பட்ட ஞாபக சக்தியாக மாறும் .


எனவே ஞாபக சக்திக்கு மிகவும் முக்கிமானது இரண்டு :
ஆர்வம் மற்றும் கவனம்

திரும்ப திரும்ப செய்தல் .




மேலும் நாள் பட்ட ஞாபகம் கூட மறக்க வாய்ப்பு உள்ளது , இதுவும் நல்லது தான் . சில சமயம் வாழ் நாள் முழுதும் நினைவில் இருக்கும்.


நாள் பட்ட ஞாபகத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம் :
explicit & implicit

explicit என்பது கொஞ்சம் யோசித்தால் நினைவுக்கு கொண்டுவர முடியும்


implicit என்பது யோசிக்க தேவை இல்லாமல் உடனே நினைவுக்கு கொண்டு வருதல்


நினவு திறனை சிறு உதாரணம் கொண்டு விளக்கலாம் :
மிதி வண்டி ஓட்ட பழகுதலை எடுத்துகொள்வோம்


யாரோ ஓட்டுவதை நாம் பார்ப்பது - சென்சரி மெமரி
முதன் முதல் ஓட்ட காற்று கொள்வது - ஷார்ட் டெர்ம் மெமரி
தத்தி தத்தி ஓட்டுவது - லாங் டெர்ம் explicit மெமரி
தயவே இல்லாமல் ஓட்டுவது -லாங் டெர்ம் implicit மெமரி (சாகும் வரை மறக்காது )


இனி நினைவு திறனை அதிகரிக்கும் வழிகள்


1 . எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும் , நீங்கள் படிப்பது ஆங்கிலமோ , ஹிந்தியோ , பிரெஞ்சோ - உங்கள் தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய செய்ய வேண்டும்


2 . புரியாமல் எதையும் படிக்க கூடாது . ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை .


3 . முழு கவனம் மிக அவசியம் .


4 . mnemonics வைத்து படிப்பது ஒரு கலை . அதை உங்கள் குழந்தைக்கு கற்று
கொடுங்கள்
உதரணம் news - north ,east,west,south


5 . படித்த வுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் . ஹோம் வொர்க் என்ற பெயரில் கடமைக்கு எழுதும் சடங்கு பயனில்லை.


6 . படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும் . பட விளக்கங்களை திரும்ப திரும்ப வரைந்து பார்க்க சொல்லவேண்டும்


7 . நல்ல உறக்கம் அவசியம் . குறைந்தது 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாக தேவை


8 .இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும் படி சொல்லவேண்டும் .


9 . தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை மேலோட்டமாக நினைவு படுத்தி பார்க்க வேண்டும் . அப்படி செய்யும் போது நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் விழிப்புடன் இருந்து தகவல் களை ஷர்ட் டெர்ம் மெமரியில் இருந்து லாங் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிக முக்கியமான பயிற்சி ஆகும் .


10 . மாவு சத்து உள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும் , எனவே புரதம் நிறைந்த எளுதில் செரிக்கும் உணவை செர்த்துகொள்வது நல்லது

உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி ?

உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி ?



ஞாபகம் ஒரு வியாதி , மறதி ஒரு வரம் என்று சொல்வார்கள் , ஆனால் நம் குழந்தை படித்தததை எல்லாம் மறுக்கும் போது மறதி ஒரு சாபம் போல நமக்கு தோன்றும் .


ஞாபகம் குறித்து சில தகவல்கள் :





நாம் பார்க்கும் , கேட்க்கும் , உணரும் , சுவைக்கும் , முகரும் அனைத்துமே நமது ஞாபகங்கள் ஆகும் . இது முதலில் முதலில் குறைந்த நேரமே மனதில் இருக்கும் (சென்சரி மெமரி ). உடனே மறந்து விடும் .


இந்த சென்சரி மெமரியில் நாம் முழு கவனத்தை செலுத்தி ஆழ்ந்து கவனித்தால் அது ஷார்ட் டெர்ம் மெமரி ஆக பதிவாகும் .இதுவும் சில மணித்துளிகளுக்கு மட்டும் இருக்கும் .


ஷார்ட் டெர்ம் மெமரி ஐ திரும்ப திரும்ப செய்யும்போது அது நாள் பட்ட ஞாபக சக்தியாக மாறும் .


எனவே ஞாபக சக்திக்கு மிகவும் முக்கிமானது இரண்டு :
ஆர்வம் மற்றும் கவனம்

திரும்ப திரும்ப செய்தல் .




மேலும் நாள் பட்ட ஞாபகம் கூட மறக்க வாய்ப்பு உள்ளது , இதுவும் நல்லது தான் . சில சமயம் வாழ் நாள் முழுதும் நினைவில் இருக்கும்.


நாள் பட்ட ஞாபகத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம் :
explicit & implicit

explicit என்பது கொஞ்சம் யோசித்தால் நினைவுக்கு கொண்டுவர முடியும்


implicit என்பது யோசிக்க தேவை இல்லாமல் உடனே நினைவுக்கு கொண்டு வருதல்


நினவு திறனை சிறு உதாரணம் கொண்டு விளக்கலாம் :
மிதி வண்டி ஓட்ட பழகுதலை எடுத்துகொள்வோம்


யாரோ ஓட்டுவதை நாம் பார்ப்பது - சென்சரி மெமரி
முதன் முதல் ஓட்ட காற்று கொள்வது - ஷார்ட் டெர்ம் மெமரி
தத்தி தத்தி ஓட்டுவது - லாங் டெர்ம் explicit மெமரி
தயவே இல்லாமல் ஓட்டுவது -லாங் டெர்ம் implicit மெமரி (சாகும் வரை மறக்காது )


இனி நினைவு திறனை அதிகரிக்கும் வழிகள்


1 . எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும் , நீங்கள் படிப்பது ஆங்கிலமோ , ஹிந்தியோ , பிரெஞ்சோ - உங்கள் தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய செய்ய வேண்டும்


2 . புரியாமல் எதையும் படிக்க கூடாது . ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை .


3 . முழு கவனம் மிக அவசியம் .


4 . mnemonics வைத்து படிப்பது ஒரு கலை . அதை உங்கள் குழந்தைக்கு கற்று
கொடுங்கள்
உதரணம் news - north ,east,west,south


5 . படித்த வுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் . ஹோம் வொர்க் என்ற பெயரில் கடமைக்கு எழுதும் சடங்கு பயனில்லை.


6 . படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும் . பட விளக்கங்களை திரும்ப திரும்ப வரைந்து பார்க்க சொல்லவேண்டும்


7 . நல்ல உறக்கம் அவசியம் . குறைந்தது 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாக தேவை


8 .இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும் படி சொல்லவேண்டும் .


9 . தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை மேலோட்டமாக நினைவு படுத்தி பார்க்க வேண்டும் . அப்படி செய்யும் போது நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் விழிப்புடன் இருந்து தகவல் களை ஷர்ட் டெர்ம் மெமரியில் இருந்து லாங் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிக முக்கியமான பயிற்சி ஆகும் .


10 . மாவு சத்து உள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும் , எனவே புரதம் நிறைந்த எளுதில் செரிக்கும் உணவை செர்த்துகொள்வது நல்லது

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

மென்மையான கைகள் வேண்டுமா…


மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் மிகவும் அழகான பகுதி கைகள் என்றே கூறலாம். ஆனால், கைகள் பராமரிப்பிற்கு அவ்வளவாக யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பாத்திரங்கள் கழுவுதல், துணி துவைத்தல் உட்பட பல வேலைகளுக்கு கைகளையே பயன்படுத்துகிறோம். இந்த செயல்களுக்கு ரசாயனங்கள் கலந்த பொருட்களை பயன்படுத்திய பின் சன்ஸ்கிரீன் போன்றவற்றை உபயோகிக்க தவறி விடுகிறோம்.

இதன் விளைவாக, கைகளில் வறட்சி, அரிப்பு, வெடிப்பு, ரத்தம் கசிதல் மற்றும் வலி ஆகியவை ஏற்படுகின்றன. எனினும், கைகளை பராமரிக்க போதிய கவனம் செலுத்தினால், இவற்றை தவிர்க்க முடியும்.

அதற்காக சில டிப்ஸ் கள் இதோ…

கைகள் பராமரிப்பு:

முகத்தில் காணப்படும் தோலைப் போலவே, கைகளின் பின்புறம் காணப்படும் தோலும் மிகவும் மென்மையானது. எனவே, முகத்தைப் போலவே, கைகளுக்கும் அதிக கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டும். குறிப்பாக, கைகளில் ஏற்படும் ஈரப்பதம் இழப்பை ஈடு செய்ய, மாய்ச்சரைசர் கிரீம் போன்றவற்றை பயன்படுத்துவதோடு, ரசாயனங்கள் நேரடியாக கைகளில் படுவதையும் தவிர்க்க வேண்டும்.

*ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும், வெது வெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து அதில் கைகளை மூழ்குமாறு, 15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். அதன்பின் கைகளை நன்றாக துடைத்துவிட்டு, கைகளுக்கான கிரீம் தடவ வேண்டும். இது கைகளின் தோலுக்கு ஊட்டமளிக்கும். கிரீம்கள் தடவிய பின், அவற்றின் மேலே கையுறைகள் அணிந்து கொள்வது நல்லது.

*கைகளின் தோல் மிகவும் வறட்சியாக உடையவர்கள், மேலே சொன்ன படி கைகளை கழுவிய பின், ஹேண்ட் கிரீமை அடர்த்தியாக, தடவ வேண்டும். பின், அதன் மேல் மெல்லிய துணியை போர்த்தி, சூடான பாரபின் மெழுகை ஊற்ற வேண்டும். பாரபின் மெழுகின் சூட்டால், ரத்த ஓட்டம் அதிகரித்து, தோலில் காணப்படும் துளைகள் விரிந்து ஹேண்ட் கிரீம் சிறப்பாக உறிஞ்சப்படும்.

* கைகளில், இறந்த செல்களை நீக்க கரகரப்பான கிரீம்கள் (எக்ஸ்போலியன்ட்) தடவி அவற்றை நன்கு தேய்க்க வேண்டும். பின், சிறிது நேரம் கழித்து அவற்றை கழுவிய பின், மிதமான ஹேண்ட் வாஷ் தடவ வேண்டும். அவற்றை மிதமான தண்ணீரால் கழுவ வேண்டும். இதனால் கைகளில் ரத்த ஓட்டம் சீராகும்.

மிருதுவான துணியால் கைகளை துடைத்த பின், ஹேண்ட் லோஷன் தடவ வேண் டும். கைகளை சிறந்த முறையில் பராமரிக்க வாரத்திற்கு ஒரு முறையாவது இவ்வாறு செய்தால், நல்ல பலன் கிடைக்கும். மிகவும் குளிர்ந்த பிரதேசத்தில் வசிப்பவர்கள், கைகளுக்கு கம்பளி உறைகள் அணிந்து, கைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

சன்ஸ் கிரீன்:

வயதாவதால், தோலில் சுருக்கம் மற்றும் கோடுகள் போன்றவை ஏற்படும். சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் நேரடியாக தோலில்படுவதால், விரைவிலேயே வயதான தோற்றம் ஏற்படுகிறது. இவற்றில் இருந்து சன்ஸ்கிரீன்கள் பாதுகாப்பு அளிக்கின்றன. எனவே, தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால், இவை, தடுக்கப்படும்