சனி, 19 நவம்பர், 2011

நட்புக்கு களங்கம் எற்படுத்தாதவர் உண்மையான நண்பன். நண்பனுக்கு களங்கம் எற்படுத்தமலிருப்பது நட்பு. நட்பின் மூலம் உருவாகும் ஒன்று நண்பன். நட்பில் பலவிதமான முறைகள் உருவாகும்.

நோய் வந்தபிறகு வேதனையோடு சிகிச்சை பெற்றுக்கொள்வதைவிட வருவதற்கு முன்பே பாதுகாத்துக் கொள்வதுதான் ஆரோக்கியத்தின் இரகசியம். அதுவும் நமது உடலில் ஏற்படும் மாறுதல்களையும், நோய்களையும் நாமே உணர முடியும். பலதடவை கண்ணாடியின் முன் நின்று நமது முகத்தை ரசித்து பார்க்கும் நாம், நம் பற்களையும் ரசித்துப் பார்க்க வேண்டும். பற்களை நாக்கின் உணர்வினாலும், பற்களை துலக்கும்போதும், கைவிரல்களின் உணர்வினாலும் பற்களில் ஏற்படும் மாற்றங்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தற்காப்பு முறைகளைக் கடைபிடிக்க ஆரம்பிக்க வேண்டும்.
 
பற்களைப் பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய வழிகள் இதோ...
 
பல் சொத்தை, பயோரியா போன்ற பல் நோய்கள் வராமல் தடுக்க வாயை எப்போதும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.
 
காலையிலும், இரவு படுக்கப்போகும் முன்பும் ப்ரஷ்ஷின் மூலம் நன்றாக பல்லை துலக்க வேண்டும். பலர் பல் துலக்க வேண்டும் என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டு, கடுமையான அமைப்புள்ள ப்ரஷ்களை வாங்கி தேய் தேய் என்று தேய்த்து பற்களை ஒரு வழி பண்ணி விடுகிறார்கள். இதனால் கிருமிகள் ஓடுகிறதோ இல்லையோ உங்கள் பற்களில் தேய்மானம் ஏற்பட்டு வலிமை இழந்து போய்விடும் ஜாக்கிரதை.
 
குழந்தைகளுக்கு மட்டுமல்ல அனைவருமே ஃப்ளோரைடு பற்பசையைப் (பேஸ்ட்) பயன்படுத்துவது நல்லது.
 
பிறந்த குழந்தையின் பற்களுக்கு தாய்ப்பால் மிகவும் அவசியம். பாலுக்கும் பல்லுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? தாய்ப்பாலில்தான் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. அதுமட்டுமின்றி, அழகான முகத்தோடு குழந்தையின் முகம்-தாடை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதோடு பற்களுக்குள் நோய் வராமலும் தடுக்க தாய்ப்பால் உதவுகிறது.
 
பற்களில் ஒட்டிக் கொள்ளக்கூடிய வெண்சர்க்கரை கொண்ட மிட்டாய், சாக்லேட், ஐஸ்க்ரீம் போன்றவற்றை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். இல்லையெனில் குழந்தைகளின் பற்களை கொஞ்சம் கொஞ்சமாக அரித்துவிடும்.
 
காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள், தானியங்கள் பருப்பு வகைகளைக் கொடுத்து வந்தால், வளரும் குழந்தைகளுக்கு பற்களின் வளர்ச்சி முழுமையாகவும், நிறைவாகவும் இருக்கும்.
 
எந்தெந்த காய்கறிகளை அல்லது கீரைகளை சமைக்காமல் சாப்பிட முடியுமோ அவற்றையெல்லாம் நன்றாக மென்று சாப்பிட வேண்டும். ஏனெனில், அவை பற்களுக்கு பயிற்சி அளிப்பது மட்டுமல்லாமல் உடலுக்கு ஊட்டச்சத்தாகவும் இருக்கும்.
 
சாப்பிட்ட பின்பு வாய்நிறைய நல்ல தண் ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படியே அந்த தண்ணீ ரால் வாயைக் கொப்பளித்து விழுங்க வேண்டும். துப்பக்கூடாது. இதனால் வாய் சுத்தமாகும்.
 
ஒவ்வொரு முறையும் சாப்பாட்டுக்குப் பிறகு ஒரு தேங்காய் துண்டையோ அல்லது ஒரு கேரட்டையோ நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இதனால் பற்களின் மேல் ஒட்டிக் கொண்டிருக்கும் உணவுத்துகள் நீங்கி பற்கள் இயற்கையாகவே சுத்தம் அடைந்துவிடுகின்றன.
 
பற்களின் இடுக்குகளில் உணவுப் பொருள் சிக்கிக் கொள்ளும்போது அவற்றை எடுக்க 'பல்குச்சி'யைப் பயன்படுத்துவதால், நம் பற்களுக்கும், ஈறுக்கும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. பல்குச்சிக்குப் பதிலாக 'டென்டல் ஃப்லாஸ்' (Dental Floss) எனும் நூலை பயன்படுத்தலாம். இதனால் பற்களுக்கும் ஈறுகளுக்கும் எந்தப் பாதிப்பும் இன்றி பற்களுக்குள் சிக்கிக் கொள்ளும் உணவுத் துணுக்குகளை சுலபமாக அகற்றலாம். சாப்பிடும்போது வாயின் இருபுறமும் சமமாக மென்று சாப்பிடுவது நல்லது.
 
புகையிலை, பான்பராக், குட்கா போன்றவைகளை அறவே தவிர்க்க வேண்டும். இது பல்லை நாறடித்து பிரச்சினை ஏற்படுத்துவதோடு வாய்ப்புற்றுநோயை ஏற்படுத்திவிடும்.
 
அதிக சூடான உணவுகளையோ பானங்களையோ, அல்லது அதிக குளிர்ச்சியானவற்றையும் தவிர்ப்பது நல்லது.
 
அதையும் மீறி நம் கண்களுக்குப் புலப்படாமல் நம் பற்களின் இடுக்குகளில் ஒளிந்திருக்கும் கிருமிகளை பல் மருத்துவ நிபுணரின் உதவியோடுதான் விரட்ட முடியும். எனவே, ஆறு மாதங்களுக்கொரு முறையாவது பல் மருத்துவரை அணுகி பரிசோதனைகள் செய்து கொண்டு சிகிச்சை பெற வேண்டும்.

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி?

அமெரிக்கா நாட்டில் 12 பேரில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு அல்லது சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட உபாதைகள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டிலும் நிறையப் பேருக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்தியாவில் சுமார் 7 கோடிப் பேர்களுக்கு பல்வேறு விதமான சிறுநீரக வியாதிகள் ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆண்டிற்கு சுமார் 80 லட்சம் பேருக்கு புதியதாக சிறுநீரக வியாதி வருவதாகவும் 90,000 பேர் முற்றிய சிறுநீரக செயலிழப்பாக மாறி அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிய வந்துள்ளதுரீதில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிய வந்துள்ளதுரீதில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு சிறுநீரக வியாதிகள் ஆரம்பத்தில் பெரிய அறிகுறிகள் இல்லாமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணம். இவ்வாறு கவனிக்கப்படாத அல்லது தெரியாமல் விடப்பட்ட சிறுநீரக வியாதிகள் பல காலம் கழித்து முற்றிய நிலையில் தெரிய வரும் போது அதற்குண்டான சிகிச்சைக்கு ஆகும் செலவு மிக அதிகம். இந்தியா போன்ற ஏழை நாட்டில் நூற்றில் ஒருவருக்கே அது சாத்தியப்படலாம்.

ஆனால் சிறுநீரக வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் அவற்றை குணப்படுத்துவதும் அல்லது கட்டுப்படுத்துவதும் மிக எளிது.

1. சிறுநீரக வியாதி இல்லையா என்பதை ஒருவர் எவ்வாறு கண்டறிவது?

நான் படித்த ஒரு கட்டுரையில் சிறுநீரகங்களின் வேலைத்திறன் 75% குறையும் வரை பாதிக்கப்பட்டவர் எந்த தொந்தரவையும் உணர மாட்டார் என்று சொல்லப்பட்டிருந்தது அது உண்மையா?

இது முழுக்க உண்மை. சிறுநீரகங்களைப் பொறுத்த வரை நாம் இரண்டு விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று சிறுநீரகங்களைப் போல சக்திக்கு மீறி உழைக்கும் உறுப்புக்கள் நம் உடலில் இல்லை. அதனால் சிறுநீரகங்கள் 70-80மூ அவற்றின் வேலைத் திறனை இழக்கும் வரை நம் அடலுக்கு பெரிய கஷ்டம் இல்லாமல் பார்த்துக் கொள்கின்றன. அதனால் ஆரம்ப நிலை சிறுநீரக செயலிழப்பை நம்மால் உணர முடிவதில்லை. இரண்டாவதாக ஆரம்பத்தில் தெரியும் அறிகுறிகளும் சாதாரணமான மற்றும் பொதுவானவையாக இருக்கின்றன. உதாரணமாக களைப்பு, சோர்வு, வேறு சில அறிகுறிகளான உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை, சிறுநீரில் புரத ஒழுக்கு ஆகியன மருத்துவ, ஆய்வக பரிசோதனைகளில் மட்டுமே தெரிய வரும். எனவே தான் சிறுநீரக பாதிப்பு அல்லது செயலிழப்பை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து மிகவும் கடினமாக உள்ளது.

2. என்றாலும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப (எச்சரிக்கை)அடையாளங்கள் என்னென்ன என்று தெரிந்தால் அதை வைத்து சிலரேனும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப கட்டத்தை அறிந்து பயன் பெற உதவக் கூடுமல்லவா?

திடீரென்று சிறுநீரகங்களை பாதிக்கும் சில வியாதிகளல்லாது (பாம்பு கடி, வயிற்றுப் போக்கு போன்ற காரணங்கள்) நிரந்தமாக சிறுநீரகங்களை செயலிழக்க வைக்கும் நோய்களால் வரும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப நிலையில் எதுவும் அறிகுறிகள் வரலாம். அவையாவன: கை, கால் முகம் வீக்கம், காரணம் தெரியாத தொடர் சோர்வு, அதிக களைப்பு, தோலில் அரிப்பு, தோல் நிறம் மாறுதல் முக்கியமாக வெளுத்துப் போகுதல், சிறுநீரில் இரத்தம் அல்லது அளவு குறைவாக போதல், உயர் இரத்த அழுத்தம், அடிக்கடி (முக்கியமாக இரவில்) சிறுநீர் கழித்தல்.

உண்மையில் சொல்லப் போனால் தங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்து கொள்ள நினைக்கும் யாரும் சில எளிய பரிசோதனைகளை செய்து பார்த்துக் கொள்வதன் மூலம் மட்டுமே சிறுநீரகங்களின் ஆரோக்யத்தை உறுதி செய்து கொள்ள முடியும். அவையாவன சிறுநீர் பரிசோதனை, இரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின் இவற்றின் அளவு. இவைகளில் ஏதேனும் கோளாறு என்றால் மட்டுமே மற்ற பரிசோதனைகள் தேவைப்படும்.

3. அப்படியென்றால் அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு இருக்குமா?

அப்படியல்ல. அது வரை சரியான அளவு அதாவது பகலில் 3-4 முறை இரவில் படுக்கச் செல்லும் முன் ஒரு முறை சிறுநீர் கழிப்பு என்று இருந்தவர்கள் திடீரென அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வந்தால் அதற்கு முதல் காரணம் சிறுநீரக பையில் கிருமித் தாக்குதல்-சிறுநீரகப்பை அழற்சி (புண்) பெண்களுக்கு ஆண்களை விட இது இன்னும் அதிகம். இது எளிதில் குணபடுத்தக் கூடிய ஒரு சிறிய தொந்தரவு தான்.

ஆண்களுக்கு முக்கியமாக வயதானவர்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பி (மூத்திரக்காய்) வீக்கம் சிறுநீர் அடைப்பு காரணமாகவும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தொந்தரவு வரலாம். எதையும் நீங்கள் ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதன் மூலம் இதை தெளிவு செய்து கொள்ள வேண்டும்.

அதே போல அது வரை நல்ல உடல் ஆரோக்யத்துடன் இருந்த ஒருவர் காரணம் எதுவும் இல்லாமல் அடிக்கடி சோர்ந்து போவது, எளிதில் களைத்து விடுவது, கவனக் குறைவு, அதீத ஞாபக மறதி போன்ற தொந்தரவுகள் இருந்தாலும் அதற்கு சிறுநீரக செயலிழப்பு ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை நினைவில் வைத்து முன்பே சொன்னபடி சில எளிய பரிசோதனைகள் மூலம் அதை தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

இதே போல தோல் உலர்ந்து போதல், தோல் வெளுத்தல் அல்லது நிறம் மாறுதல், நமைச்சல், பசி இல்லாமல் இருப்பது, சிறுநீரகங்கள் உள்ள இருபுற விலாஎலும்புகளின் கீழ் வலி. கணுக்கால்களுக்கு கீழ் வீக்கம் (ஆரம்பத்தில்) போன்ற அறிகுறிகள் இருந்தாலும் சிறுநீரகங்களை பரிசோதித்தல் தவறில்லை. மேலும் சிறுவயதில் (35 வயதிற்கு கீழ்) உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கண்டிப்பாக சிறுநீரகங்களை பார்த்துக் கொள்ள வேண்டும். இதைத் தவிர சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் (எந்த வயதினரும்), அடிக்கடி சிறுநீரில் கிருமித் தாக்குதல் வருபவர்கள், சிறுநீரக கற்கள் வந்தவர்கள், குடும்பத்தில் வேறு யாருக்கேனும் சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் சிறுநீர்கங்களை பரிசோதித்து பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் சிறுநீரக கோளாறுகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கவும் சரி செய்யவும் இயலும்.

4. இந்த ஆரம்ப பரிசோதனைகளத் தவிர வேறு பரிசோதனைகளும் வேண்டி வருமா?

மேற்குறிப்பிட்ட எளிய பரிசோதனைகளில் கோளாறு இருப்பதாக தெரிய வந்தால் அதை மேலும் உறுதி செய்த கொள்ளவும் சிறுநீரக பாதிப்பின் தன்மை. கடுமை, சில சமயங்களில் முன்னேறிய சிறுநீரக பாதிப்பினால் வேறு உறுப்புக்கள் (முக்கியமாக இதயம்) பாதிப்பு என்பதை அறிய பல்வேறு சோதனைகள் தேவைப்படலாம்.

(சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் மேற்கொள்ள வேண்டிய சோதனைகள் பற்றி சிறுநீரகங்களுக்கான பரிசோதனைகள் என்ற கையேட்டில் விரிவாகக் காணலாம்)

5. சரி இந்த பரிசோதனைகளில் சிறுநீரக பாதிப்பூஃ- செயலிழப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். இனி என்ன நடக்கும்.

வெறும் சிறுநீரக பாதிப்பு அல்லது ஆரம்ப சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களுக்கு (சிறுநீரக ஸ்கான் செய்யும் போது அவை சுருங்காமல் இருக்கும்) அதிலும் சில வகை பாதிப்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுவர்களுக்கு (சிறுநீரக நுண்தமனி அழற்சி எனப்படும் பாதிப்பு) சிறுநீரக தசை துணுக்கு (கிட்னி டயாப்ஸி) என்ற ஒரு பரிசோதனை தேவைப்படலாம்.

இந்த பரிசோதனையின் முடிவைப் பொறுத்து சில மருந்துகளை குறிப்பிட்ட காலம்வரை மருத்துவரின் கண்காணிப்பில் எடுத்துக் கொள்வதன் மூலம் சிலவகை சிறுநீரக வியாதிகளை முழுவதும் குணப்படுத்தவோ அல்லது நன்கு கட்டுப்படுத்தவோ முடியலாம். சிறுநீரக தாரையில் கிருமி தாக்குதல், சிறுநீரக பாதையில் கற்கள் உள்ளவர்கள் அதற்குரிய வைத்தியத்திற்கு பின்னரும் இவை எதனால் வந்தது என்பதை ஆராய்ந்து அதற்குரிய மருத்துவத்தை மேற்கொள்வதால் இத்தொந்தரவுகள் மீண்டும் மீண்டும் வராமலும் அதனால் சிறுநீரகங்களின் செயல்திறன் பாதிக்கப்படாமலும் காப்பாற்றிக் கொள்ளலாம். சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தத்தால் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த அழுத்தத்தை நன்கு கட்டுப்படுத்தி வைப்பதன் மூலமும் சில பிரத்யேக மருந்துகளின் மூலமும் சிறுநீரக செயலிழப்பை பெருமளவு குணப்படுத்தலாம்.

6. முன்னேறிய சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்கள் செய்ய வேண்யது என்ன?

சிறுநீரக பாதிப்பு/செயலிழப்பு உள்ளவர்களின் சிறுநீரக பாதிப்பை பல்வேறு கட்டங்களாக பிரிக்கலாம்.

1.ஆரம்ப கட்டம் (நிலை-1) சிறுநீரக பாதிப்பு மாத்திரம் (சிறுநீரக செயலிழப்பு இல்லை) உயர் இரத்த அழுத்தம், சிறுநீரில் புரத ஒழுக்கு, கை, கால, உடல் வீக்கம் ஆகிய தொந்தரவுகள் இருக்கலாம்.

2. லேசான சிறுநீரக செயலிழப்பு (நிலை-2): இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு-2. மி.கி. புள்ளிக்கு கீழே). இவ்விரு சந்தர்ப்பங்களிலும் இரத்த அழுத்தக் கட்டுப்பாடு, ஆகார, மாற்றம், சிறுநீரக பாதிப்பு வேகமாக அதிகரிப்பதைத் தடுக்கும் சில மருந்துகளை சிறுநீரக மருத்துவரின் ஆலோசனைப் படி எடுத்துக் கொள்ளுதல், தொடர்ந்து சிறுநீரக மருத்துவரின் கண்காணிப்பு, சிறுநீரகங்களை பாதிக்கும் மருந்துகள், காரணங்கள் (உதாரணமாக வலி மருந்துகள், நாட்டு மருந்துகள்) ஆகியவற்றை தவிர்த்தல் ஆகிய செயல்களின் மூலம் சிறுநீரக பாதிப்பை பெருமளவு சரிசெய்யலாம் அல்லது மேலும் அதிகமாகாமல் கட்டுப்படுத்தி வைக்கலாம்.

3. அதிக சிறுநீரக செயலிழப்பு (நிலை-3)- இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு 2-6 மி.கி. புள்ளிகள் இந்த சமயத்தில் மேற்கூறிய சிகிச்சைகள் அல்லாமல் இரத்த விருத்திக்கான மருந்துகள், எள்ளிகள் இந்த சமயத்தில் மேற்கூறிய சிகிச்சைகள் அல்லாமல் இரத்த விருத்திக்கான மருந்துகள், எலும்புகளுக்கான மருந்துகள் இவைகளையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு 6 மி.கிக்கு மேல் ஆகும் போது அடுத்த கட்ட முற்றிய சிறுநீரக செயலிழப்பில் மேற்கொள்ள சிகிச்சையான டயாலிசிஸ் சிகிச்சைக்கு தேவையான சில முன்னேற்பாடுக்களை செய்து கொள்ள வேண்டும். அவையாவன தொடர் டயாலிசிஸ் சிகிச்சைக்கு இரத்த குழாய்களிலிருந்து மீண்டும் மீண்டும் இரத்தம் எடுப்பதை எளிதாகும். இரத்த நாள இணைப்பு அறுவை சிகிச்சை (@ பிஸ்டுலா ஆபரேஷன்) செய்து கொள்ள வேண்டும். அதை சரியான சமயத்தில் செய்து கொள்ளுவதால் பின்வரும் காலத்தில் பலவித செலவுகளை வெகுவாக குறைக்கலாம். டயாலிசிஸ் சிகிச்சையில் மிக எளிதாகி விடுகின்றது. ஈரலைப் பாதிக்கும் ஹெபடைடிஸ்-டீ என்ற வைரஸ் கிருமியிலிருந்து நம்மை பாதுகாக்கும் தடுப்பூசியையும் மருத்துகள் உங்களுக்கு பரிந்துரைப்பார் இதனால் டயாலிசிஸ் சிகிச்சையின் போது இந்த கிருமி வேறு யாரிடமிருந்தும் நமக்கு வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

4. முற்றிலும் சிறுநீரக செயலிழப்பு (நிலை-4) இந்த கட்டத்தில் சிறுநீரகங்களின் மொத்த செயல் திறன் 10 சதவிகிதத்திற்கும் கீழே வந்து விடுகின்றது அப்போது இரத்தத்தில் கிரியேட்டின் அளவு 6-7 மி.கி க்கு. மேலும் பெரும்பாலும் இரத்த அளவும் மிகவும் குறைந்து விடும். அப்போது நமது உடலின் பல்வேறு உறுப்புக்களும் பாதிக்கப்பட்டு பல்வேறு வித உபாதைகள் வரலாம். இந்த சமயத்தில் டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை மூலம் மட்டுமே ஒருவர் தொடர்ந்து ஆரோக்யத்துடன் உயிர் வாழ முடியும். எனவே முன்பு கூறியிருந்தது போல இதற்கான ஏற்பாடுகளை தகுந்த நேரத்தில் செய்து முடித்து இருக்க வேண்டும். அதற்குரிய காலம் வந்தவுடன் டயாலிசிஸ் சிகிச்சையை தாமதமின்றி தொடங்கி முறையாக செய்து வந்தால் சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்த பின்னரும் கூட தொடர்ந்து நல்ல ஆரோக்யத்துடன் வாழ்வை தொடர முடியும். சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொள்ள தகுதி உள்ளவர்கள் டயாலிசிஸ் சிகிச்சைக்கு பதில் அந்த சிகிச்சையை முயற்சி செய்யலாம்.



பாகற்காயின் மருத்துவ குணங்கள்


நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும்.

உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.

1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.

2. பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.

3. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.

4. பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.

5. ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.

6. பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.

7. பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.

8. நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.

9. ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.

10. மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது.

11. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.

12. சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.

13. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.

14. உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.

அன்புக்குரியவரை அணைத்தால் உடல்வலி, மனஅழுத்தம் குறையும்


உடல்வலி, மனஅழுத்தம் ஏற்படும் நேரத்தில் அன்புக்கு உரியவரை கட்டி அணைத்தால் வலி, கவலை பறக்கும் என்று அமெரிக்க ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

கலிபோர்னியா பல்கலைகழக உளவியல் துறை பேராசிரியர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். 25 பெண்களை தேர்வு செய்தனர். அவர்களின் கையில் லேசாக சூடு வைத்தனர். "ஆ" என அலறித் துடித்த பெண்களிடம் ஏற்கனவே சேகரித்து வைத்திருந்த அவர்களது ஆண் நண்பர்களின் படத்தை அந்தந்த பெண்ணிடம் கொடுத்தனர்.

தனது அன்புக்குரியவரை பார்த்த விநாடியில் பெண்களின் இதழில் புன்னகை தோன்றியது. அவர்களது காயத்தின் வலி தணிந்தது. படத்தை பார்த்ததற்கே இப்படியா என, அவரவர் துணையை நேரில் வரவழைத்தனர். லேசாக அணைத்துக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

கடுமையான உடல் வலி, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை அன்புக்குரியவரின் அணைப்பு விரட்டி விடும் என்ற முடிவுக்கு வந்தனர். இதுகுறித்து மனநல கல்வியாளர் டாக்டர் லுட்விக் லோன்ஸ் கூறுகையில், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக நீடிக்க, தம்பதியர் குறைந்தபட்சம் தினமும் நான்கு முறையாவது அணைத்துக் கொள்ள வேண்டும்.

மாதத்திற்கு 2 முறையாவது கைகோர்த்து வாக்கிங் செல்ல வேண்டும். ஒரு முறையாவது சினிமா, டிராமா என்று செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இப்படி செய்து வந்தால் டாக்டர்களை தேடிச் செல்லாமல், மக்களின் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்குமாம்.

thanks net

புதன், 13 ஜூலை, 2011

இளமையாக வாழ பப்பாளி சாப்பிடுங்கள்



நாம் நோயின்றி வாழ மருத்துவமனையை நாடுவதை விட நம் உணவுப் பழக்கத்தை கொஞ்சம் மாற்றினாலே போதும்.கொஞசம் உடற்பயிற்சி, கொஞ்சம் உணவு, நிறைய பழங்கள் சாப்பிடுவதன் மூலம் நம் உடலில் உள்ள நோய்களை விரட்டி அடிக்கலாம்.

பப்பாளி
எழிதில் அனைவருக்கம் கிடைக்ககூடிய பழம். ஆப்பிளைக் காட்டிலும் மிகவும் விலை குறைவு. இதன் பயன்கள் மிக அதிகம். பப்பாளி பல மருத்துவ குணங்களைக் கொண்டது. பப்பாளி உடல் நலனுக்கு உகந்த சிறந்த பழம். பப்பாளியில் மிக குறைவான கலோரிகளே உள்ளன. 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன. பப்பாளியை தினமும் சேர்த்துக் கொண்டால் நோயின்றி வாழ உதவும்.

பப்பாளியில் உள்ள சத்துக்கள்:

பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ,போலிக் அமிலம், பொட்டசியம், காப்பர், பாஸ்பரஸ், இரும்பு, நார்ச்த்துக்கள் உள்ளன.

பப்பாளிகளில் சர்க்கரைச் சத்தும் வைட்டமின் சியும் மிக அதிகமாகஇருக்குமாம். பப்பாளியில் சிறிதளவு வைட்டமின் பி1, வைட்டமின் பி2மற்றும் நியாசினும் உண்டு. நிறைய பருப்பு உணவை உண்டபின் பப்பாளித் துண்டுகள் சாப்பிட்டால் நன்றாகச் செரிமானம் ஆகிவிடும்.

பப்பாளி தொடர்ந்து 4 வாரங்கள்சாப்பிட்டால் கொழுப்புசத்து 19.2விழுக்காடுகள் குறைகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பப்பாளிபழத்தை சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம்.வறண்ட மேல் தோலை அகற்றி, புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு.

பப்பாளி பழத்தை முகத்தில் மெதுவாகப்பூசி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு மிதமான சுடுநீரில் கழுவுங்கள். முகம் பளிச் என்று பிரகாசிக்கும் .

சில பெண்களின் முகம் கரடு முரடாகத்தெரியும்.இந்த முரடான முகத்தை மென்மையாக்கும் சக்தி பப்பாளி தோலுக்கு உண்டு.பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வையுங்கள். அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக்கொள்ளுங்கள். இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், முகம் மென்மையானதாக மாறி விடும்.

கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடலாமா?
பப்பாளிப்பழத்தை கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்கள் சாப்பிடக்கூடாது என்ற கருத்து உள்ளது. இவர்கள், பப்பாளிப் பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், உடல் வெப்பநிலை அதிகரித்து, ஆரம்ப நிலையில் உள்ள கரு கலைந்துவிடும் அல்லது கரு உருவாகுதல் தள்ளிப்போகும் என்பதால் அப்படிச் சொல்கிறார்கள். அதேநேரம், மேற்படி பெண்கள் இந்த பழத்தில் ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் சாப்பிடுவதில் தவறே இல்லை. ஒருவேளை, அளவுக்கு அதிகமாக பப்பாளிப் பழத்தை அவர்கள் எடுத்துக்கொண்டால், அந்த பழத்தை சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு டம்ளர் பால் குடிப்பது உடல் வெப்பநிலை அதிகரிப்பதை தடுத்து நிறுத்திவிடும்.

பப்பாளியின் மருத்துவப் பயன்கள்:
  • நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து.
  • பித்தத்தைப் போக்கும்.
  • உடலுக்குத் தெண்பூட்டும்.
  • இதயத்திற்கு நல்லது.
  • மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்.
  • கல்லீரலுக்கும் ஏற்றது.
  • கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.
  • சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்
  • கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்
  • முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்.
  • இரத்தச்சோகைக்கு நிவாரணமளிக்கும்.
  • மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது.
  • பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்
  • பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், ‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது.
  • பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது.
  • இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர். * உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது.
  • இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்.
  • ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்.
  • நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.
  • பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது.
  • பப்பாளியின் இலைகளும் வேர்களும் சிறுநீர் பெருக்கியாகவும், பழமானது மூலநோய்க்கும் பயன்படுத்தப்படுகிறது.
  • தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸ் அருந்துபவர்களுக்கு உடலில் கழிவுகளே இருக்காது.
  • நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும்.
  • பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது.
பப்பாளி மரத்தோலானது கயிறு தயாரிக்கவும், இலைகள் சோப்புக்கு மாற்றாகவும் கூட சில நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இது மிகச் சிறந்த கறை நீக்கியாக செயல்படுகிறது. ஜாவா தீவு மக்கள் பப்பாளி பூக்களை சாப்பிடுகின்றனர்.


புதன், 1 ஜூன், 2011

ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும் வேதிப் பொருள் மிளகாயில்..

காரசாரமான உணவிற்கு முக்கிய காரணமாய் இருப்பது மிளகாய். நமது சமையலில் மிளகாய்க்கு சிறப்பான இடம் உண்டு. இது ஊசி மிளகாய், குண்டு மிளகாய், குடமிளகாய் என மூன்று வகைகளைக் கொண்டது.

இவை காரத்தன்மையால் வேறுபடுகின்றன. குடமிளகாய் காரம் குறைந்தது. இத்தாவரத்தின் காய் சமையலுக்கும், கனிந்த கனிகள் மற்றும் விதைகள் நறுமணப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

இத்தாவரத்தில் ஒலியோரெசின், கேப்சைசின், கரோடினாய்டுகள், பிளேவனாய்டுகள், எளிதில் ஆவியாகும் எண்ணெய் மற்றும் ஸ்டிராய்டல், சபோனின்கள், கெப்சைசிடின்ஸ் – ( விதைகள் ) பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும்

விதைகளுடன் கனிகள், ஜீரணத்தை ஊக்குவித்து உடலுக்கு வலுவேற்றுகிறது. தசைக்குடைச்சல் வலியை போக்கும் தன்மை கொண்டது. கிருமி நாசினியாக செயல்படுகிறது. வியர்வை மற்றும் ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும். வலிபோக்கும் மருத்துவத்தில் பயன்படுகிறது.

உடலுக்கு வெப்பத்தினை தரும் தன்மை. ரத்த ஓட்டத்தினை அதிகரிக்க உதவுகிறது. கை, கால், ஆகிய பகுதிகளுக்கும், மற்ற மைய உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டத்தினை சரி செய்கிறது. கெப்சைசின் எனும் வேதிப்பொருள் இத்தன்மைக்கு அடிப்படையாகிறது.

தோல் நோய்களை போக்கும்

தோல்களின் மீது தடவும் போது நரம்பு நுனிகளின் உணர்வினை மழுங்கச் செய்து ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கிறது. தோல் வியாதியான சொரியாசிஸ், நியூரால்ஜியா மற்றும் தலைவலி, மூட்டுவலி, ஆகியவற்றையும் போக்க வல்லது.

பாக்டீரியங்களுக்கு எதிராக செயல்புரிகிறது. உள்ளுக்குள் சாப்பிடும் போது வயிற்றுவலி, வாயு தீர்க்கும். ஜீரண சுரப்பிகள் சுரக்க தூண்டும். ஜீரண மண்டல நோய்களைப் போக்கும். தொண்டை கரகரப்பு கொப்பளிப்பாக பயன்படுகிறது.

வலிகளைப் போக்கும்

சர்க்கரை மற்றும் குல்கந்த் சேர்த்து முக்கோண வில்லைகளாகச் செய்யப்பட்டு தொண்டை கரகரப்புக்கு மருந்தாகிறது. மேடைப் பேச்சாளர்கள் மற்றும் பாடகர்களுக்கு மிகவும் உதவும். வலிகளைப் போக்க தேய்ப்புத் தைலமாக பயன்படுகிறது.

இந்திய மருத்துவத்தில் சின்கோனாவுடன் சேர்த்து நாட்பட்ட மூட்டுவலிக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. பெருங்காயம் மற்றும் கற்பூரத்துடன் சேர்ந்து காலரா நோய்க்கு மருந்தாகிறது. தீப்புண் மேல் தூவப்படுகிறது

திங்கள், 30 மே, 2011

குழந்தைகள் சாப்பிடுவது இல்லை

குழந்தைகள் சாப்பிடுவது இல்லை. அதுவும் பள்ளிக்கு சென்றுவிட்டால் "லஞ்ச் பாக்ஸை" திறக்காமல் அப்படியே கொண்டு வந்து விடுகிறார்கள். காலையில் கிளம்பும் அவசரத்தில் சரியாக சாப்பிடுவது இல்லை" என பள்ளி செல்லும் குழந்தைகளின் பெற்றோர் கவலை ஏராளம்.

சில பெற்றோர் பள்ளி ஆசிரியையிடம் "மதியம் சாப்பிடறானா என்று பார்த்துக்கொள்ளுங்கள்" என்று அன்பு கட்டளையிடுவதை பார்த்திருக்கிறோம்.

பள்ளிச் செல்லும் குழந்தைகள் எந்த மாதிரியான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்?

காலையில் சாப்பிடாமல் குழந்தைகள் பள்ளிக்கு செல்லக்கூடாது. காலையில் எழுந்தவுடன் ஒரு கப் தண்ணீர் அருந்த செய்ய வேண்டும். சிறிது நேரம் கழித்து ஒரு கப் பால் தர வேண்டும். ஒரு அவித்த அல்லது ஆம்லேட் செய்த முட்டை சாப்பிடலாம். வேறு எதாவது டிபன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மதியம் எந்த மாதிரியான உணவை கொடுத்து அனுப்ப வேண்டும்?

நூடில்ஸ் போன்ற உணவுகளை குழந்தைகள் விரும்புகின்றனவே.... பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, அவசரம் காரணமாக அவர்கள் விரும்புகிறார்களா இல்லையா என்று பார்க்காமல் எதையாவது ஒரு உணவை திணித்து அனுப்புவதை பெற்றோர் தவிர்க்க வேண்டும் நூடில்ஸ் போன்றவற்றை மதியம் தருவதை விட எப்போதாவது சாப்பிடலாம்.

என்ன உணவு தந்தாலும் அவசியம் காய்கறி சாலட் கொடுத்தனுப்ப வேண்டும். காரட், பீன்ஸ், முளை கட்டிய தானியம், பெரிய வெங்காயம், தக்காளி போன்றவற்றுடன் உப்பு, மிளகு சேர்த்து சாலட் செய்ய வேண்டும். சிறிதளவு சீனியும் சேர்க்கலாம்.

சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை எப்படி சாப்பிட வைப்பது?

ஒவ்வொரு நாளும் ஒருவகை உணவு தந்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். நல்ல சத்துள்ள உணவை விதம் விதமாக தர வேண்டும். நாம் விரும்பும் உணவை விட அவர்கள் விரும்பும் உணவை தரலாம்.

அவர்கள் சாக்லேட்டுகளை தானே விரும்புகிறார்கள்... சாக்லேட்கள் சாப்பிடுவது கெடுதியானது. சிறுகுழந்தையாக இருக்கும் போதே பழகி விட்டால் பள்ளிக்கு செல்லும் போது உணவில் நாட்டமில்லாமல் சாக்லேட் சாப்பிட விரும்பும். அதில் தேவையற்ற கலோரி உள்ளது. சத்து ஏதும் இல்லை. தயிர்சாதம் செய்யும் போது திராட்சை, மாதுளை, ஆரஞ்ச் இதழ்களை அதில் சேர்க்கலாம். கேரட் சேர்க்கலாம்.

இவை ஆரோக்கியத்திற்கும் நல்லது. குழந்தைகளை கவரும் விதமாகவும் இருக்கும். தினமும் ஒரு கப் கீரை தர வேண்டும். கீரை தனியாக சாப்பிட தயங்கும் குழந்தைகளுக்கு கீரை சப்பாத்தி, கீரை சேர்த்த அடை தோசை, கீரை புலாவ் போன்றவை தரலாம்.

பள்ளிக்கு சென்று களைத்து வரும் குழந்தைகளுக்கு மாலையில் எந்த மாதிரி உணவு தர வேண்டும்?

கடைகளில் கிடைக்கும் பாக்கெட் உணவுகள், வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய் பலகாரங்களை தவிர்க்கலாம். சுண்டல், பயிறு, அவல் போன்றவை தரலாம். தேங்காய் துருவல் சேர்த்த அவல் உப்புமா மிக நன்று. ஒரு கப் பால் தரவேண்டும். பேக்கரி பொருட்களை தினமும் எடுத்துக்கொள்ளக்கூடாது. என்றாவது ஒரு நாள் சாப்பிடலாம்.

இரவில் எவ்வகை உணவு தர வேண்டும்?

இரவில் சாப்பிடாமல் படுக்க கூடாது. எண்ணெயில் பொரித்த உணவை இரவில் தவிர்க்க வேண்டும். காபி, டீ குடிக்க கூடாது. எளிதில் ஜீரணமாகும் உணவினை தரலாம். பால் தரலாம்.

இரவில் கண்விழித்து படிக்க டீ, காபி சாப்பிட்டால் தூக்கம் வராது என்பது சரியா?

இது ஒரு மன ரிதியான எண்ணம். அறிவியல்பூர்வமாக அப்படி இல்லை.

குழந்தைகள் படிப்பிற்கும் உணவிற்கும் தொடர்பு உண்டா?

சரியான உணவு எடுத்துக்கொள்ளாத குழந்தைகள் சரியாக படிக்காது. சரிசம உணவு இல்லையெனில் பார்வை கோளாறு, தோல் நோய்கள், உற்சாகமின்மை ஏற்படும். கீரை, பழங்களை தினமும் சாப்பிட வேண்டும். தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். குழந்தைகளிடம் "சாப்பிட்டீங்களா" என்று கேட்பது போல் "தண்ணீர் குடித்தீர்களா" என்று கேளுங்கள்.

வாயு நிறைந்த குளிர்பானங்களில் உடலுக்கு தேவையற்ற அதிக கலோரி உள்ளது. இதனால் உடல் எடை கூடும். அவற்றை தவிர்க்க வேண்டும். பழத்தை ஜூசாக்கி குடிப்பதை விட பழமாகவே சாப்பிடுவது நல்லது.

அசைவ உணவுகளை சிறியவர்கள் சாப்பிடலாமா?

வளரும் குழந்தைகளுக்கு எல்லா சத்தும் தேவை. மீன், சிக்கன் போன்றவை சாப்பிடலாம்.

நமது ஊரின் விருப்ப உணவு இட்லியில் எத்தனை கலோரி உள்ளது?

(கலோரி என்பது உணவின் மூலம் கிடைக்கும் சக்தியின் அளவு) 50 கலோரி உள்ளது. அரிசியும் உளுந்தும் சேர்வதால் இட்லி உடலுக்கு நல்லதே. இட்லி சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும், அதற்கு பதிலாக சப்பாத்தி சாப்பிடலாம் என்பது சரியல்ல. சர்க்கரை நோயாளிக்கு சாப்பிடும் அளவு தான் முக்கியம்

திங்கள், 23 மே, 2011

முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்!


வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,

* முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.

* வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

* குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

* சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

* யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

* முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

* செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.

* சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.

* புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.

* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

* வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

* வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.

* வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

* அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்

மருந்துகளில் மாமருந்து தேன்..


தேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு. எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதையில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது.

மேலும் தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனைச் சேகரித்ததோ அந்தச் செடியின் மருத்துவக் குணத்தை அது பெற்று விடுகிறது. நோய் நீக்கும் மருந்தாக உயர்ந்த உணவாக தேன் உள்ளது.

சித்தர் நூல்களில் பித்தம், வாந்தி, கப சம்பந்தமான நோய்கள், வாயுத் தொல்லை, இரத்தத்தில் உள்ள குற்றங்களை நீக்கி சுத்தம் செய்ய வல்லது தேன் என்று கூறப்பட்டுள்ளது.

கொம்புத்தேன், மலைத்தேன், மரப்பொந்துத்தேன், மனைத்தேன், புற்றுத்தேன், புதியதேன், பழைய தேன் என ஏழு தேன் வகைகளையும், அவற்றின் மருத்துவ குணங்களையும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மூலிகைகள், மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து நிரம்பிய உயர்ந்த மலையிலிருந்து சேகரிக்கப்படும் மலைத்தேனில் மூலிகையின் மருத்துவக் குணமும் சேர்ந்து இருக்கும். இத்தேன் மருந்துடன் சேர்த்து உண்ணும் அனுபானத்திற்குச் சிறந்ததாக விளங்குகிறது.

வயிற்றின் நண்பன் தேன்
வயிற்றில் ஏற்படும் புண், அழற்சி, ஈரல், பித்தப்பை நோய்கள் அனைத்துக்கும் மருந்தாக தேன் அமைந்துள்ளது. அதனால்தான் வயிற்றின் நண்பன் தேன் என்கிறோம்.

ஒன்று முதல் மூன்று தேக்கரண்டி தேனை 100 மி.லி. ஆறிய வெந்நீருடன் கலந்து தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் வெறும் வயிற்றில் உணவு அருந்துவதற்கு முன் பருகி வர வேண்டும்.

இப்படி செய்தால் வயிற்றுப்புண், இரப்பை அழற்சி ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும்.

இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கப்படும் அமிலத்தின் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் அமிலத்தால் வயிற்றுப் புண்ணிற்கு ஏற்படுத்தப்படும் தூண்டுதலைக் குறைத்து, எரிச்சல், வலியை நீக்கும்.

மேலும் நீர்த்தாரைப் புண், சிறுநீரக, இதய நோய்களையும் தடுக்க வல்லது தேன்

நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் ஒரு கரண்டி சர்க்கரை


சிறிய நுண் உயிரிகளால் ஏற்படும் நோய் தொற்றை எதிர்ப்பதற்கு ஒரு கரண்டி சர்க்கரை வெகுவாக உதவுகிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நோய் தொற்றை எதிர்க்கும் ஆண்டிபயாடிக் திறனை மேம்படுத்துவதில் சர்க்கரை முக்கிய பங்கு வகிக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு சில நுண் உயிரி தொற்றுகள் பாதிப்பு காரணமாக நோய்கள் நீண்ட காலம் இருப்பதுடன் அடிக்கடி நோய்களை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

மருந்தில் உள்ள நோய் எதிர்ப்புத் தன்மையை நுண் உயிரிகள் வீரியம் இழக்கச் செய்து விடுவதால் நோய் தொற்றுப் பாதிப்பு அடிக்கடி ஏற்படுகிறது.

நுண் உயிரிகளால் ஏற்படும் நோய் பாதிப்பை தவிர்க்க தாவர சர்க்கரை வகைகளான குளுக்கோஸ், ப்ரக்டோஸ் உதவுகிறது. ஒரு கரண்டி சர்க்கரை மருந்தின் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரித்து நுண் உயிரிக் கிருமிகள் அழிக்கப்படுகின்றன.

இதனால் நோயாளிகளுக்கு ஏற்படும் நோய்த் தொற்று அபாயமும் தவிர்க்கப்படுகிறது. பாஸ்டன் பல்கலைகழக விஞ்ஞானிகள் சர்க்கரையை பயன்படுத்தி நுண் உயிரி சோதனையை செய்த போது இந்த உண்மை தெரியவந்தது.

சிறுநீரக பாதையில் இ.கோலி என்ற பக்டீரியா நோய் தொற்றை ஏற்படுத்தும். இந்த பாதிப்பை அடிக்கடி ஏற்படுத்தும் நுண் உயிரியை 99.9 சதவீதம் 2 மணி நேரத்தில் சர்க்கரை உதவி மூலம் விஞ்ஞானிகள் அகற்றினர்.

சர்க்கரை இல்லாமல் உள்ள மருந்து உரிய பலன் அளிப்பதில்லை என்கிற இந்த ஆய்வு அறிக்கை நேச்சர் இதழில் வெளியாகி உள்ளது

செர்ரி பழத்தின் மருத்துவ குணங்கள்


செர்ரிப்பழத்தைப் பற்றிப் பலர் இன்றும் தெரியாமலேயே இருக்கிறார்கள். மற்ற பழவகைச் செடிகளுக்குத் தண்ணீர், உரம் தேவைப்படுவது போல செர்ரிப்பழச் செடிக்குத் தேவைப்படுவதில்லை. இந்தச் செடிகளுக்கு நோய் பிடிப்பதில்லை.

"பிணிகள் பிடிக்காத செடி" என்றே இதைச் சொல்லாம். மேலும் இதன் அருகில் வந்து ஆடு, மாடுகள் மேய்வதில்லை. போர்ட்டோ ரிகே, செர்ரிபார்படோஸ் செர்ரி என்பன செர்ரிப்பழத்தின் வேறு பெயர்கள். தமிழில் "அற்புத நெல்லி" என்று வழங்கப்படுகிறது. இது புதர்வகைச் செடியாகும்.

நான்கு அடி முதல் ஐந்து அடி உயரம் வரை அடர்ந்து தழைத்து வளரும். இவைகள் கரும்பச்சை நிறத்திலும், பழங்கள் சிறிய ஆப்பிள் வடிவத்திலும் இருக்கும். பழங்கள் சிவப்பு நிறத்தில் அமைந்திருக்கும். இந்தச் செடியை நட்டு ஏழு மாதத்திற்குள் பயன் தரக்கூடியது. பழம் தரக்கூடியது.

ஒரு செடியிலிருந்து வாரம் ஒரு முறை இரண்டு கூடைகள் பழம் கிடைக்கும். இந்தச் செடியை விவசாயிகள் மட்டுமே வளர்க்க முடியும் என்றில்லை நாமும் நம் வீடுகளில் வளர்த்துச் சிறந்த பலனைக் காணலாம். செர்ரி செடி தாவர இயலில் "மல்பீஜஸியாஸ்" குடும்பத்தைச் சேர்ந்தது.

செர்ரிப் பழத்தில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. 100 கிராம் எடையுள்ள செர்ரிப் பழத்தில் 1000 முதல் 3000 மி.கி வரை வைட்டமின் சி நிறைந்துள்ளது. எனவே நீங்கள் தினந்தோறும் இரண்டு அல்லது மூன்று செர்ரிப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் போதும்.

உங்கள் உடம்புக்குத் தேவையான வைட்டமின் சி கிடைத்துவிடும். செர்ரிப் பழத்தைக் கொண்டு ரசம், ஜாம், ஜெல்லி, ஜூஸ் ஆகியவை தயாரிக்க முடியும்.

தண்ணீருடன் தேவையான அளவு பழங்களைப் போட்டுப் பிழிய வேண்டும். மெல்லிய துணிப்பையினால் அதை வடிகட்டி அத்துடன் தேவையான அளவு சர்க்கரை, சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவேண்டும்.

இதுதான் செர்ரிப் பழ ஜூஸ். செர்ரிப் பழங்களைத் துண்டு துண்டுகளாக நறுக்கி விதைகளை நீக்கிவிட வேண்டும். சம அளவு சர்க்கரை சேர்த்துத் தேவையான விகிதத்தில் எலுமிச்சைச் சாறு கலந்து கொதிக்கவிட வேண்டும்.

தகுந்த பதத்தில் அதை அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டும். இதுவே அருமையான செர்ரி ஜாம் ஆகும். ரொட்டித் துண்டுகளை இந்த ஜாமில் தொட்டுச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி ஆகியவற்றிற்கு இந்த ஜாமைத் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். செர்ரி காய்களை நறுக்கி உப்பில் கலந்து அவைகளை வெயிலில் காய வைக்கவேண்டும்.

மூன்று நாட்கள் இவ்வாறு செய்தபின் அவைகளுடன் இஞ்சிச் சாறு, மஞ்சள் தூள் ஆகியவைகளைப் போட்டுக் குலுக்க வேண்டும்.

அதன்பின் கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை போன்றவற்றைக் கொண்டு தாளியுங்கள். அதன்பின் அந்தக் கலவையைப் பாட்டிலில் நிரப்பி வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம்

சில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுக்க உதவி செய்கின்றன


சில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுக்க உதவி செய்கின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.

உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதாம்: பாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.

இந்த படுக்கை நேர சிற்றுண்டியை முயற்சித்துப் பாருங்கள். ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.

தேநீர்: உறங்கச் செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை. அந்த வகையில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.

வாழைப்பழம்: மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்தோடு இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது.

இந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹோர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.

பால்: பால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.

ஓட்ஸ்: நீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர்கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிறது.

இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.

செர்ரிபழம்: மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது

வெள்ளி, 20 மே, 2011

ரோஜாவின் மருத்துவ குணங்கள்


காதலை சொல்லும் மலர் ரோஜா. இந்த மலர் அன்பை சொல்லவும், அழகுக்காகவும் மட்டுமல்ல மருத்துவத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. 35 மில்லியன் ஆண்டு காலமாக பூமியில் ரோஜா இருப்பதாக சான்றுகள் தெரிவிக்கின்றன.

தோட்டப்பயிராக ரோஜாவை பயிரடத் தொடங்கி 5000 ஆண்டுகள் ஆகின்றன. முதன் முதலில் சீனாவில் தான் ரோஜா மலர் தோட்டப்பயிராக விளைவிக்கப்பட்டுள்ளது. அரேபிய நாடுகளில் வாசனை திரவியங்களுக்காகவும், மருத்துவ பயனுக்காகவும் மிகவும் பயன்படுத்துகிறார்கள்.

ரோமானிய பேரரசில் பல்வேறு மிகப் பெரிய ரோஜாத் தோட்டங்கள் நகரை அலங்கரித்துள்ளது. இத்தகைய ரோஜா மலர்கள் மருத்துவ பயன் உடையவை. ரோஜாப்பூவின் அழகும், மணமும் மக்களை அதுவும் பெண்களை பெரிதும் கவரும். பொதுவாக ரோஜாப்பூவால் சரும நோய்கள் நீங்கும்.

ரத்த விருத்தி உண்டாகும். ரோஜா மலரின் இதழ்களை வேளைக்கு ஒரு கைப்பிடி வீதம் வெறுமனே மென்று சாப்பிட்டால் சீதபேதி குணமாகும். செயல்திறன் மிக்க வேதிப்பொருள்கள் மலர்கள் நறுமண எண்ணெய் உடையவை.

பினைல்எத்தானல், க்ளோ ரோஜினிக் அமிலம், டான்னின், சையானின், கரோட்டின், சர்க்கரைகள் போன்ற வேதிப்பொருட்கள் ரோஜாமலரில் அடங்கியுள்ளன. ரோஜாப்பூ மொக்கு மற்றும் சதகுப்பை(தமிழ் மருந்து கடைகளில் கிடைக்கும்) ஆகியவற்றை உரலில் போட்டு இடித்து சுடு நீரில் போட்டு மூடி வைத்து விட வேண்டும்.

மூன்று மணி நேரம் குறையாமல் வைத்திருந்து பிறகு வடிகட்டி கொள்ள வேண்டும். குழந்தைகளாக இருந்தால் கால் டீஸ்பூனும், பெரியவர்களாக இருந்தால் ஒரு டீஸ்பூனும் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுத்துவர உஷ்ண வயிற்று வலி போகும்.

களிம்பு ஏறாத பாத்திரத்தில் ரோஜா இதழ்களை பாத்திரத்திலிட்டு கொதிக்கும் நீரை அதில் விட்டு நன்றாக கிளறி விட்டு அப்படியே மூடி வைத்திருக்க வேண்டும். இப்படி 12 மணி நேரம் மூடி வைத்திருக்க வேண்டும். பிறகு மூடியை திறந்து கைகளை சுத்தம் செய்து கொண்டு இதழ்களை கசக்கி பிழிந்து குழம்பு போல் ஆக்க வேண்டும்.

பிறகு இந்த நீரை வேறொரு பாத்திரத்திலிட்டு 500 கிராம் சர்க்கரை மற்றும் 200 மில்லி நீரும் சேர்த்து காய்ச்ச வேண்டும். சர்க்கரை பாகு வந்ததும் ஏற்கனவே செய்து வைத்த ரோஜாப் பூ நீரை இதில்விட்டு மறுபடியும் காய்ச்ச வேண்டும்.

இப்போது பாகு தேன் பதத்திற்கு வந்ததும் மூன்று அவுன்ஸ் அளவுக்குப் பன்னீரை கலந்து கிளறி இறக்கி ஆற வைத்துக் ஒரு பாட்டிலில் ஊற்றிக்கொள்ள வேண்டும். இரண்டு கரண்டி டம்ளரில் விட்டு தேவையான அளவு தண்ணீர்விட்டு சாப்பிட்டு வரலாம்.

இதனால் ரத்த விருத்தி உண்டாகும். ரோஜாப்பூ இதழ்களை தேவையான அளவு சேகரம் செய்து சம அளவு பயத்தம்பயிரை அதனுடன் சேர்த்து 4,5 பூலாங்கிழங்கை சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொண்டு தினமும் உடலில் இந்த விழுதை தேய்த்து அரை மணி பொறுத்து குளித்து வந்தால் சரும நோய்கள் ஒழிந்து உடல் நல்ல நிறம் பெறும்

புதன், 11 மே, 2011

உங்களுக்காக எடையை குறைக்கும் 7 எளிய வழிகள்

உங்கள் எடை கூடிவிட்டதா? எப்படிக் குறைப்பது? எந்த முறையைப் பின்பற்றுவது? இப்படி யோசனையிலேயே நேரம் வீணாகிக் கொண்டு இருக்கிறதா?

இதோ, உங்களுக்காக எடையை குறைக்கும் 7 எளிய வழிகள்:

1. உடற்பயிற்சி:
வாரம் 5 முறையாவது தவறாமல் செய்ய வேண்டும். உடற்பயிற்சியால் கொழுப்பு கறைகிறது. இதனால் எடை குறைவதோடு, பல நோய்களிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது.

2. பசித்தால் மட்டுமே சாப்பிடவும்:
"அப்படித்தான் செய்கிறேன்" என்று கூறுவதற்கு, முன் யோசிக்கவும். எத்தனை முறை வயிறு நிறைய சாப்பிட்ட பிறகு ஐஸ்கிரீம், இனிப்பு என்று சாப்பிட்டிருப்பீர்கள்? எடையை மேலும் கூட்டவே இது உதவுகிறது!

3. எதைச் சாப்பிடலாம் என்று தெரிந்து கொள்ளவும்:
"நான் 4 பிஸ்கெட்டும் ஒரு கிளாஸ் ஜூஸ் மட்டும் குடிச்சேன்" என்று நீங்கள் சொல்லலாம். நீங்கள் சாப்பிட்ட பிஸ்கெட்டுகளிலும் ஜூஸிலும் எத்தனைக் கலோரிகள் இருந்தன என்று தெரியுமா? எதைச் சாப்பிட்டால் நல்லது என்பதை அறிந்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

4. தண்ணீர் தண்ணீர்:
ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பதால் சாப்பிடும் அளவும் குறையும். அத்தோடு உடலில் உள்ள நச்சுப் பொருட்களையும் இது சுத்தம் செய்கிறது.

5. உட்கொள்ளும் அளவு:
மதியம் அதிகமாக சாப்பிட்டுவிட்டால், இரவில் உட்கொள்ளும் அளவை குறைக்கவும். காலையில் சாப்பிட்டதைவிட, மதியம் சற்று குறைவாகவும், இரவில் அதைவிட குறைவாகவும் சாப்பிடுவது நல்லது.

6. ரிலாக்ஸ் ப்ளீஸ்:
தினமும் நாம் சந்திக்கும் பிரச்சனைகள், சில சமயங்களில் நம்மை அளவுக்கு அதிகமாக சாப்பிடத் தூண்டலாம். அதனால் தினமும் 15 நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்ய எடுத்துக் கொள்ளவும்.

7. "நான் குண்டு" என்று யோசிப்பதை தவிர்க்கவும்:
நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் பற்றிய நினைப்பை விட்டு, மேற்கண்ட வழிகளைப் பின்பற்றினால் எப்படி மாறுவீர்கள் என்பதை யோசிக்கவும்.

இன்னும் என்ன தாமதம்? உங்கள் எடைக் குறைப்பை இப்போதே ஆரம்பியுங்கள்!

சீன மருத்தும்


நோய்களைத் தடுப்பது, நோய்க் கூறுகளைக் கண்டறிவது, நோய்களுக்கு சிகிச்சை தருவது ஆகியன சீன மூலிகை மருத்துவத்தின் நோக்கமாகுகம். இதில் இயற்கை மருந்துகளும் தயாரிக்கப்பட்ட மருந்துகளும் உள்ளன. அதாவது மூலிகைகள் மிருகங்கள், கணிமப் பொருட்கள்., சில ரசாயனப் பொருட்கள், உயிரி பொருட்கள் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகளாகும். சீன தயாரிக்கப்படும் மருந்துகளாகும். சீன மருந்தின் கண்டுபிடிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு ஆயிரம் ஆண்டுகள் வரலாறு உண்டு. எனினும் “சீன மருத்துவம்”என்ற சொல் சீனாவில் மேலை மருத்துவம் அறிமுகமான பின்னரே உருவாக்கப்பட்டது. மேலை மருத்துவத்தில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக சீன மருத்தும் என்று பெயரிடப்பட்டது.


சீன மூலிகை மருத்துவத்தின் வரலாறு

ஷென் நோங் என்பவர் ஒரே நேரத்தில் பல மூலிகைகளை உட்கொண்டு கடைசியில் நச்சூட்டப்பட்ட ஒரு கதை சீன வரலாற்றில் காணப்படுகின்றதது. பழங்காலச் சீன மக்களுக்கு மருந்துகளை கண்டறிவதில் என்னெனஅன கிடையூறுகள் ஏற்பட்டன என்பதையும் அது விவரிக்கின்றது.

சீனாவில் ச்சியா, ஷாங் சூ வம்சங்கள் ஆட்ச்செய்த கி.மு.22 முதல் கி.பி.256 வரை எரிசாராய மருந்தும், சூப்(சாறு)மருந்தும் பயன்படுத்தப்பட்டது. சூ வம்ச காலத்தில் (கி.மு 11 முதல் கி.பி771)எழுதப்பட்ட பாடல் புத்தகத்தில் (ஷி ஜிங்)மருந்து பற்றி சில சகவல்கள் இடம் பெற்றுள்ளன. பண்டைய சீன மருத்துவம் பற்றி பதிவு செய்யப்பட்ட ஆவணம் இது தான். மற்றொரு புத்தகம் நெய் ஜிங் என்பது சீன மருத்துவக் கோட்பாடு பற்றிய ஆரம்பகால புத்தகமாகும். இதில் காய்ச்சலினால் உடல் வெப்பம் அதிகமாக உள்ள நோயாளியைக் குளரிவிக்க வேண்டும். குளிர்காய்ச்சல் கண்ட நோயாளியின் உடம்பைச் சூடாக்க வேண்டும் என்பது போன்ற கோட்பாடுகள் இதில் எழுதப்பட்டுள்ளன. மேலும் மருந்தில் ஐந்து சுவைகளைச் சேர்க்கும் போது வயிற்றுக்குள் கசப்பு ஏற்பட்டு வயிற்றுப் போக்கு ஏற்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இவையாவும் சீன மருத்துவக் கோட்பாட்டுக்கு அடிப்படையாக அமைந்தன.

சீன மூலிகை மருத்துவம் பற்றிய ஆரம்பகாலப் புத்தகம் எஷன் நோங் பெண் காவ் ஜிங் என்பது. இதில் பென் என்றால் வேர், வாவ் என்றால் குருத்து. இந்தப் புத்தகம் கி.மு.221 முதல் கி.பி.220 வரை இருந்த ச்சின் மற்றும் ஹான் வம்சங்களின் கால்தில் எழுதப்பட்டது. இதற்கு அடிப்படையான ஏராளமான தகவல்களை ச்சின் வம்ச காலத்திற்கு கின்ற மருத்துவ நிபுணர்கள் திரட்டினர். இந்தப் புத்தகத்தில் 365 வகை மருந்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் சில இன்றைக்கும் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் புத்தகம் தான் கீழை மருத்துவத்தின் தோற்றத்திற்கு ஒரு தொடக்கம் என்று கூறலாம்.

தாங் வமிச காலத்தில் (கி.மு618-கி.பி907)பொருளாதார வளம் கொழித்ததால் கீழை மருத்துவத்திற்கு ஊக்கம் கிடைத்தது. தாங் அரசு மருத்துவம் பற்றிய ஒரு செய்யுள் நூலை எழுத வைத்தது. அதன் பெயர் தாங் பென் காங். இது மருத்துவ சாத்திரத்தில் இப்போது கிடைக்கும் மிகவும் ஆரம்பகால நூலாகும். இந்தப் புத்தகத்தில் 850 வகை மருந்து மூலிகைகளும் அவற்றின் படங்களும் உள்ளன. இந்தப் புத்தகத்தால் கீழை மருத்துவத்தின் மதிப்பு உயர்நதது.

மிங் வம்சகாலத்தில் (கி.பி1368-கி.பி1644)மூலிகை மருந்தில் நிபுணரான லி ஷிசென் 27 ஆண்டுகள் அரும்பாடுபட்டு பென் சாவ் க்காங்மு என்ற புத்தகம் எழுதினார். 1892 வகை மூலிகை மருந்துகள் பர்றிய விவரங்களைக் கொண்டுள்ள இந்தப் புத்தகம் சீன வரலாற்றிலேயே மகத்தான படைப்பாகக் கருதப்படுகின்றது.

1949ல் நவசீனா தோற்றுவிக்கப்பட்ட பிறகு தாவரவியல், நோய்கண்டறியும் அறிவியல், வேதியியல், மருந்துத் தயாரிப்பியல், மருந்தக மருந்துகள் போன்ற பல்வேறு துறைகளில் ஏராளமான ஆராய்ச்சிகளைச் செதுளல்ளனர். இந்த ஆராய்ச்சிகள் மூலிகை மருந்துகளின் மூலத்தையும் அவை சரியானவைதானா என்பதையும் அவை செயல்படும் முறையையும் கண்டறி. ஒரு அறிவியல் அடிப்படையை வழங்குகின்றன. பின்னர், மூலிகைமருந்தின் மூலம் பற்றி நாடு தழுவிய ஆய்வு நடத்தப்பட்டு 1961லி ஸோன் யாவ் ச்சி என்ற புத்தகம் எழுதப்பட்டது. 1977இல் மூலிகை மருந்து அவராதி வெளியிடப்பட்டது. அதன் மூலம் பதிவு பெற்ற மூலிகை மருந்துகளின் எண்ணிக்கை 5767 ஆர உயர்ந்தது. கூடவே குறிப்புப் புத்தகங்கள், ஆய்வுக் கட்டுரைகள், செய்தி ஏடுகள் மற்றும் பத்திரிகைகள் சீன மருத்துவம் பற்றி வெளியிடப்பட்டன. சீன மருந்துவம் பற்றி அறிவியல் ஆராய்ச்சிகளை நடத்தவும் கற்பிக்கவும் மருந்துகளைத் தயாரிக்கவும் நிறுவனங்களும் ஏற்படுத்தப்பட்டன.

சீன மூலிகை மருந்துகளின் இயற்கை வளங்கள்

சீனாவின் பிரதேசம் மிகப் பெரியது. பல்வேறு புவியியல் அம்சங்களும், வேறுபட்ட கால நிலைகளும் உள்ளன. இதன் காரணமாக வெவ்வேறு இயற்கைச் சூழல்கள் உண்டாகி பலவகையான மூலிகைச் செடிகளை வளர்்க்க முடிகிறது. தற்போது சீனாவில் 81000க்கும் அதிகமான மூலிகைச் செடிகள் பயிரிடப்பட்டுள்ளன. அவற்றில் 600 மூலிகை மருந்துகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. உலகிலேயே சீனாவில் தான் அதிக மூலிகை மருந்துகள் உள்ளன என்ற பெருமையும் கிடைத்துள்ளது. இந்த மருந்துகள் உள்நாட்டு மக்களின் தேவைகளை நிறைவு செய்வதோடு 80 நாடுகளுக்கும் வட்டாரங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு பெரும் புகழ் பெற்றுள்ளன.

சீன மருந்துகளைப் பயன்படுத்துவது

சீன மருந்துகள் பயன்படுத்தப்படுவதற்கு நீண்ட நெடும் வரலாறு உண்டு. மக்களின் வாழ்க்கையில் சீன மூலிகை மருந்துகள் முக்கிய பங்காற்றியுள்ளன. இவை ஓரழவுக்கு சீனப் பண்பாடு போன்றவை. சீன மூலிகை மருந்துகளின் பெரும்பாலான மூலப் பொருட்கள் இயற்கை வளங்களில் இருந்து கிடைக்கின்றன. இதனால் பக்க விளைவுகள் அவ்வளவாக ஏற்படுவதில்லை. மருந்தின் உள்ளே பல்வகை மூலப்பொருட்கள் இருப்பதால் பல்வேறு நோய்களைக் குணப்படுத்த முடிகின்றது. சீன மூலிகை மருந்துகளின் மற்ற1ரு அம்சம் என்ன வென்றால் அவை பெரிதும் கூட்டுப் பொருட்களாக உள்ளன. வெவ்வேறு மூலப் பொருட்களை உரியான அளவில் எடுத்து தயாரிப்பதால் சிக்கலான நோய்கள் கூடக் குணமாகின்றன. அதேவேளையில் பக்கவிறைவுகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

சீன மருந்துகள் அதனுடைய கோட்பாட்டின் அடிப்படையில் பயன்படுத்தப்படுகின்றன. மனிதனுடைய உடம்பில் மருந்து என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதில் கவனம் செலுத்தி மருந்து பயன்படுத்தப்படுகின்றது. மருந்தினுடைய வீர்யம் மூலிகைச் செடியின் தன்னையினால் தீர்மானிக்கப்படுகின்றது. மருந்தை பாதுகாப்பாகவும் பயனுள்ள முறையிலும் பயன்படுத்துவதற்காக என்னென்ன கூட்டப் பொருட்கள் மருந்தில் உள்ளன. எதிர் அறிகுறிகள் மருந்து தரவேண்டிய அளவு எவ்வாறு மருந்தை உட்கொள்வது, மருந்தை எவ்வாறு பரிந்துரைப்பது என்பது போன்ற விஷயங்களை மருத்துவர்கள் தெலிந்திருக்க வேண்டியுள்ளது. சில சமயங்களில் நோயாளிகளின் வேறுபட்ட நிலைமையைப் பொறுத்து வெவ்வேறு கூட்டுப் பொருட்களை மருந்துத் தயாரிப்புக்காகத் தெரிவு செய்ய வேண்டியுள்ளது. எதிர் அறிகுறிகளைப் பொருத்தமட்டில் மருந்திலுள்ள கூட்டுப் பொருட்களினால் ஏற்படக் கூடிய எதிர் அறிகுறி கருத்தலிப்பால் ஏற்படக் கூடிய எதிர் அறிகுறி, உணவு நச்சால் ஏற்படும் எதிர் அறிகுறி, நோயினால் உண்டாகும் எதிர் அறிகுறி போன்றவற்றை மருத்துவர்கள் கவனிக்க வேண்டியுள்ளது. மருந்தின் அளவை(டோஸ்)பொறுத்தமட்டில் ஒரு நாளில் நோயாளி எவ்வளவு மருந்து உட்கொள்ள வேண்டும். மருந்தைத் தயாரிக்கும் போது ஒவ்வொரு கூட்டுப் பொருகளும் சேர்க்கப்பட வேண்டிய சரியான அளவு என்ன என்பதையும் மருத்துவர்கள் அறிந்திருக்க வேண்டும்.


சீன மருத்துவத்தின் எதிர்காலப் போக்கு

எதிர்காலத்தில் சீனா மூலிகை மருந்துகளை தொடர்ந்து உற்பத்தி செய்வதோடு மேலும் பிறப்பான மூலிகைச் செடிகளின் வகைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தும். இதற்காக ஐஸோடோப்பு மற்றும் உயிரி பொறியியல் நுட்பங்கள் பயன்படுத்தப்படும். இதனிடையே அதிமதுர வேர், மண்டையோட்டு மலர் செடியின் வேர், காய்ச்சலைக் குணப்படுத்தக் கூடிய காய் ஹு எனப்படும் சீன மூலிகை போன்ற மிகவும் தேவைப்படக் கூடிய மீலிகைகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 20 வகை மூலிகைகளின் உறர்பத்தியை சீனா விரிவுப்படுத்தும். அதே வேளையில் விதைகள் மக்கிப் போகாமல் தடுக்கவும் மேலும் புதிய வகை மூலிகைகளைப் பயிலிடவும் சீனா மேலும் பல ஆராய்ச்சிகளில் ஈடுபடும்.

வெள்ளி, 6 மே, 2011

சுத்தமான குடி நீரை செலவில்லாமல் வீட்டிலயே தயார் பண்ணலாம் !

உலகின் மொத்த நீர் வளத்தையும் மனித குலம் நாசம் செய்து கொண்டிருக்கும் வேளையில், அதுவும் குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் சுகாதாரமான குடிநீர் கிடைக்காத அவல‌நிலை இருக்கின்ற வேளையில், இலவசமாக அரிசி வாங்கிச் சாப்பிட்டாலும், குடிப்பதற்கு நீர் விலைக்கு வாங்க நேரிட்ட வேளையில் இன்பத் தேன் வந்து பாய்வதை நம் காது கேட்காமல் போய்விட்டது.

உலகச் சுகாதார நிறுவனம் மற்றும் பல ஆய்வு நிறுவனங்கள் பல்வேறு சோதனைகள் நிகழ்த்திக் கதிரவன் மூலம் நீரைக் குடிநீராக மாற்றும் எளிய வழியைக் கண்டறிந்து மூன்றாண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தி இருக்கின்றது.

SODIS (SOlar water DISinfection) என்ற இந்த முறையைப் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. சரி இந்த சூரியக் கிருமிநாசினி முறையைப் பற்றிச் சற்று விரிவாகக் காணலாம்.

கதிரவனின் கதிர்களில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத A-புற ஊதாக் கதிர்கள் நீரில் கலந்திருக்கும் பாக்டீரியாவின் செல்லமைப்பைச் சிதைக்கின்ற வலிமை படைத்தவைகளாக இருக்கின்றன.

மேற்குறிப்பிட்ட புற ஊதாக் கதிர்கள் நீரிலிருக்கும் பிராணவாயுவுடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் பெராக்ஸைடாக மாறிக் கிருமிகளை அழிக்கின்றன.

மேலும் அகச்சிவப்புக் கதிர்கள் நீரைச் சூடாக்குவதால் மேலே குறிப்பிட்ட இருவினைகளும் மிக வேகமாக நிகழ்கின்றன.

இந்த முறையைப் பயன்படுத்துவது எப்படி? இதற்கென்று தனியான தொழிற்சாலைகள் நிறுவ வேண்டுமா?


மேலே குறிப்பிட்டவாறு,

1. சுத்தமான வண்ணமில்லா ஒளிபுகும் பிளாஸ்டிக் போத்தல்களை (2 லிட்டருக்கும் குறைவான அளவு) எடுத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பு: குடி நீருக்கென்றே தயாரிக்கப்பட் பிளாஸ்டிக் போத்தல்கள்.

2. நமக்குக் கிடைக்கும் அசுத்தமான நீரை அந்தப் போத்தல்களில் முக்கால் பங்கு ஊற்ற வேண்டும். அதிலிருக்கும் ஆக்ஸிஜன் வெளியேறும் வகையில் 20 விநாடிகள் குலுக்க வேண்டும்.

3. மிகவும் கலங்கிய நிலையில் நீர் இருந்தால் அதை வடிகட்டிக் கொள்வது நல்லது.

4. பின்னர் நீர் நிரப்பிய போத்தல்களைச் சாய்வான நிலையில் சூரியனைக் காணும் வண்ணம் பளபளப்பான அலுமினியக் கூரைகளில் வைத்து விட வேண்டும்.

5. சூரியனின் பார்வையில் ஆறு மணி நேரம் இவ்வாறு வைக்க வேண்டும்.

இதோ, சூரியனால் பதம் பார்க்கப்பட்ட சுத்தமான குடிநீர் தயார்! செலவே இல்லாத இந்த முறையை உலகச் சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கின்றது என்பது ஒரு முக்கியமான தகவல் ஆகும்.

மேகமூட்டமான காலங்களில் ஆறுமணி நேரத்திற்கு மேலாகவோ அல்லது இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்தோ வைத்திருத்தல் அவசியம் ஆகும். மேலும் அந்தப் போத்தல்களில் இருந்தே நீரைக் குடிப்பது சாலச் சிறந்தது.

இந்தோனேஷியாவில் இந்த முறையைப் பயன்படுத்தும் பொதுமக்கள்...


மேலும் விவரங்களுக்கு இங்கே காணுங்கள்.

சுத்தமான குடி நீரை செலவில்லாமல் வீட்டிலயே தயார் பண்ணலாம் !

உலகின் மொத்த நீர் வளத்தையும் மனித குலம் நாசம் செய்து கொண்டிருக்கும் வேளையில், அதுவும் குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் சுகாதாரமான குடிநீர் கிடைக்காத அவல‌நிலை இருக்கின்ற வேளையில், இலவசமாக அரிசி வாங்கிச் சாப்பிட்டாலும், குடிப்பதற்கு நீர் விலைக்கு வாங்க நேரிட்ட வேளையில் இன்பத் தேன் வந்து பாய்வதை நம் காது கேட்காமல் போய்விட்டது.

உலகச் சுகாதார நிறுவனம் மற்றும் பல ஆய்வு நிறுவனங்கள் பல்வேறு சோதனைகள் நிகழ்த்திக் கதிரவன் மூலம் நீரைக் குடிநீராக மாற்றும் எளிய வழியைக் கண்டறிந்து மூன்றாண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தி இருக்கின்றது.

SODIS (SOlar water DISinfection) என்ற இந்த முறையைப் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. சரி இந்த சூரியக் கிருமிநாசினி முறையைப் பற்றிச் சற்று விரிவாகக் காணலாம்.

கதிரவனின் கதிர்களில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத A-புற ஊதாக் கதிர்கள் நீரில் கலந்திருக்கும் பாக்டீரியாவின் செல்லமைப்பைச் சிதைக்கின்ற வலிமை படைத்தவைகளாக இருக்கின்றன.

மேற்குறிப்பிட்ட புற ஊதாக் கதிர்கள் நீரிலிருக்கும் பிராணவாயுவுடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் பெராக்ஸைடாக மாறிக் கிருமிகளை அழிக்கின்றன.

மேலும் அகச்சிவப்புக் கதிர்கள் நீரைச் சூடாக்குவதால் மேலே குறிப்பிட்ட இருவினைகளும் மிக வேகமாக நிகழ்கின்றன.

இந்த முறையைப் பயன்படுத்துவது எப்படி? இதற்கென்று தனியான தொழிற்சாலைகள் நிறுவ வேண்டுமா?


மேலே குறிப்பிட்டவாறு,

1. சுத்தமான வண்ணமில்லா ஒளிபுகும் பிளாஸ்டிக் போத்தல்களை (2 லிட்டருக்கும் குறைவான அளவு) எடுத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பு: குடி நீருக்கென்றே தயாரிக்கப்பட் பிளாஸ்டிக் போத்தல்கள்.

2. நமக்குக் கிடைக்கும் அசுத்தமான நீரை அந்தப் போத்தல்களில் முக்கால் பங்கு ஊற்ற வேண்டும். அதிலிருக்கும் ஆக்ஸிஜன் வெளியேறும் வகையில் 20 விநாடிகள் குலுக்க வேண்டும்.

3. மிகவும் கலங்கிய நிலையில் நீர் இருந்தால் அதை வடிகட்டிக் கொள்வது நல்லது.

4. பின்னர் நீர் நிரப்பிய போத்தல்களைச் சாய்வான நிலையில் சூரியனைக் காணும் வண்ணம் பளபளப்பான அலுமினியக் கூரைகளில் வைத்து விட வேண்டும்.

5. சூரியனின் பார்வையில் ஆறு மணி நேரம் இவ்வாறு வைக்க வேண்டும்.

இதோ, சூரியனால் பதம் பார்க்கப்பட்ட சுத்தமான குடிநீர் தயார்! செலவே இல்லாத இந்த முறையை உலகச் சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கின்றது என்பது ஒரு முக்கியமான தகவல் ஆகும்.

மேகமூட்டமான காலங்களில் ஆறுமணி நேரத்திற்கு மேலாகவோ அல்லது இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்தோ வைத்திருத்தல் அவசியம் ஆகும். மேலும் அந்தப் போத்தல்களில் இருந்தே நீரைக் குடிப்பது சாலச் சிறந்தது.

இந்தோனேஷியாவில் இந்த முறையைப் பயன்படுத்தும் பொதுமக்கள்...


மேலும் விவரங்களுக்கு இங்கே காணுங்கள்.

சிறுநீரகக் கல் எவ்வாறு உருவாகின்றது ?


உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பையில், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கல் உருவாவது சகஜம். இந்தியாவில் 80 லட்சம் மக்கள் வரை, இந்த உபாதையால் பாதிக்கப்படுகின்றனர்.


'கிட்னி ஸ்டோன்’ என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது. சிறுநீரை வெளியேற்றக் கொண்டு செல்லும் பாதையில் ஏற்படலாம். சிறுநீரைத் தேக்கி வைக்கும் பையில் ஏற்படலாம். சிறுநீரை வெளியேற்றும் இறுதி உறுப்பில் ஏற்படலாம். மிகச்சிறிய கல்லாகவும் தோன்றலாம்; ஒரு எலுமிச்சை அளவுக்கும் ஏற்படலாம். கல்லின் அளவு பொறுத்து, வலியின் தீவிரம் இருக்கும் எனக் கருதுவது தவறு. பெரிய கல், வலியே இல்லாமல் வளரலாம். கண்ணுக்கே தெரியாத சிறிய கல், அதிக வலி கொடுக்கலாம். கல் உருவாவதால் ஏற்படும் வலியை, பிரசவ வலியோடு ஒப்பிடலாம். எவ்வளவு பெரிய பலசாலியையும் ஆட்டிப் போட்டு விடும் இந்த வலி.



சிறுநீர் செல்வதில் சிரமம் ஏற்படுவதில் துவங்கி, இருபக்க இடுப்பின் பின் பக்கத்திலிருந்து அலை போல வலி உருவாகி, பிறப்புறுப்பு வரை பரவும். சிரமப்பட்டு வெளியேற்றப்படும் சிறுநீர் அதிக மஞ்சள் நிறத்துடன் காணப்படும். சிலருக்கு சொட்டு சொட்டாகவும் வெளியேறும். இதனால் தொற்று ஏற்பட்டால், காய்ச்சல் உண்டாகும். வெப்ப பகுதிகளில் வசிப்போருக்கு, உடலில் நீர்சத்து குறையும் போது, இதுபோன்று கற்கள் அடிக்கடி ஏற்படும். 40 – 60 வயதுள்ள ஆண்களிடையே இந்த உபாதை அதிகம் காணப்படுகிறது.

பரம்பரையாகவும் இது ஏற்படலாம். கல் உருவாகி, சிகிச்சை எடுத்து கொண்டோரில் 50 சதவீதத்தினருக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கல் தோன்ற வாய்ப்பு உண்டு. உடலில் உள்ள மொத்த ரத்தமும், சிறுநீரகம் வழியே செல்கிறது. ரத்தத்திலிருந்து நீரையும், ரசாயனங்களையும், சிறுநீரகம் பிரிக்கிறது. ரசாயனங்கள் கல் ஆகாமல் இருக்க, சிறுநீரகமும் சில கரைப்பான்களை சுரக்கிறது. அதையும் மீறி தோன்றும் சிறு கல்கள், ஒன்றாகச் சேர்ந்து பெரிய கல்லாக உருவாகி விடுகின்றன. சிறுநீரகத்தில் கரைப்பான்கள் சுரப்பதில், பரம்பரையாகத் தடை கொண்டவர்களுக்கு, கல் உருவாவது சகஜம். அடிக்கடி தொற்று ஏற்பட்டாலோ, சிறுநீர் அடர்த்தியாக இருந்தாலோ, அடிக்கடி வெகுநேரம் சிறுநீரை அடக்குபவர்களுக்கோ கூட, கரைப்பான்கள் சுரப்பதில் பிரச்னை ஏற்படும். மூட்டு வீக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் உடலில் உப்பு அதிகம் சுரப்பதாலும், சிறுநீரகத்தில் கல் உருவாகும்.
எந்த அறிகுறியும் தெரியாத சிறுநீரகக் கல்லை, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் அல்லது எக்ஸ்-ரே எடுத்து பார்த்து அறிந்து கொள்ளலாம். வலி போன்ற பொதுவான அறிகுறிகளைச் சொன்னாலே, கல் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க, இது போன்ற பரிசோதனைகளை எடுக்குமாறு, டாக்டர் பரிந்துரைப்பார். சில நேரங்களில், ஐ.வி.பி., என்ற, நரம்பில் சாயம் ஏற்றி, கல் இருக்கும் இடத்தையும், அதன் அளவையும் கண்டறியும் பரிசோதனையும் செய்யப்படுகிறது. கற்களை நீக்க, பெரும்பாலான நேரங்களில் கடுமையான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. நாள் ஒன்றுக்கு, நான்கைந்து லிட்டர் தண்ணீர் குடிப்பவருக்கு, சிறுநீரகத்தில் கல் இருந்தாலும், சிறுநீர் மூலம் வெளியேறி விடும். வலி ஏற்பட்டால், வலி நிவாரணி மாத்திரைகள் சாப்பிடலாம். கல்லில் உள்ள ரசாயனங்கள் குறித்து அறிந்து கொண்டால், அதை வைத்து, மருந்து, உணவுக் கட்டுப்பாடுகளை டாக்டர் பரிந்துரைப்பார். தொடர்ந்து கடும் வலி, மிகப்பெரிய கல் ஆகியவை இருந்தால், அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே அதை அகற்ற முடியும். கல் வளர்ந்து கொண்டே இருப்பது, தொடர் தொற்று ஆகியவை, சிறுநீரகத்தை பாதிக்கும் என்பதால், இதுபோன்ற நிலைகளில், அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சிறுநீரகத்தை திறந்து, அறுவை சிகிச்சை மேற்கொள்வது இல்லை. கல் இருக்கும் இடத்தில், உடலின் மேற்புறம், மின் அலைகள் உருவாக்கப்படுகிறது. இந்த அதிர்வலைகள், கல்லைத் தாக்கி, அதை உடைக்கின்றன. பொடியான கற்கள், சிறுநீர் வழியே வெளியேறி விடும். சிறுநீர் பாதையை கல் அடைத்து கொண்டால், செயற்கை குழாய் பொருத்தி கல்லை அகற்றலாம். வேறு சிகிச்சை முறைகளும் உள்ளன. இந்த உபாதை, 21ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருத வேண்டாம். 7,000 ஆண்டுக்கு முன்னால் இறந்த மனிதர்களிடமும் இது காணப்பட்டது. தற்போது சிறு வயதினர், குறிப்பாக குழந்தைகளிடம் இந்த உபாதை காணப்படுகிறது. சீனாவில், பால் பவுடரில் உள்ள மெலாமைன் என்ற பொருளால், குழந்தைகளுக்கு சிறுநீரகக் கல் உருவாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில், குழந்தைகள் அதிக உடல் எடையுடன் இருப்பது, உடல் பயிற்சி இல்லாமல் இருப்பது, காற்றூட்டப்பட்ட குளிர்பானங்களை குடிப்பது போன்ற காரணங்களால், கல் உருவாகிறது.

சிறுநீரகக் கல் உருவாவதை தடுக்க இயற்கை வழிமுறைகள் உள்ளன.

* பச்சை டீ அல்லது பால் கலக்காத டீ குடிப்பது நல்ல பலனைத் தரும். அதில் உள்ள ஆன்டியாக்சிடன்ட் தன்மை, சிறுநீரகத்தில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும்.

* சாத்துக்குடி, எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது. அவற்றில் உள்ள அமிலம், சிறுநீரில் கலப்பதால், கல் உருவாகும் வாய்ப்பைத் தடுக்கிறது.

* வாழைத் தண்டு சாப்பிடுவது, அதன் சாறை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குடிப்பது ஆகியவை நல்ல பலனைத் தரும்.

* மட்டன், மீன் சாப்பிடுவதைக் குறைப்பதும் கல் உருவாவதை தடுக்கும்.

* தினமும் இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவது மிக மிக நல்லது. கூடவே, தினமும் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். தூங்க செல்வதற்கு முன், ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து விட்டு தூங்குவ துநல்லது

புதன், 26 ஜனவரி, 2011

மருத்துவ குணங்கள் நிறைந்த மங்குஸ்தான் பழம்


ரொம்ப நாளா அங்கு அடிப்பட்டு இப்போ புதுசான பழம்தான் இந்த மங்குஸ்தான்(தீன்) பழம். மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் தோட்டப் பயிராக இதனை வளர்க்கின்றனர்.

இந்த பழமானது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்தப்பழத்தின் தோல் பகுதி தடிமனாக இருக்கும். இதன் தோல் பகுதியை உடைத்தால் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும். சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும். இதற்கு சூலம்புளி என்ற பெயரும் உண்டு.

இதன் மருத்துவ குணங்கள் சில:

* இதை தென்கிழக்கு ஆசியநாடுகளில் பழங்காலத்தில் தோல், பற்களின் ஈறு நோய்களுக்கும், பல்வலி, தொற்நோய் கிருமிகளையும்(Infection), காளான்களையும்(Fungus) அழிக்க பயன்படுத்தினர். அதே போல் காயங்கள், நாட்பட்ட புண்கள், காய்சல், இரத்தம் கலந்த வயிற்று போக்கு, உடல் மற்றும் மன சோர்வு, மன அழுத்தம், கவலை போன்றவற்றிக்கு குணமாக்க பயன்படுத்தி வந்தனர்.

* சமீபத்தில் வீக்கம் குறைக்கவும், புற்று நோய் எதிர்ப்பு சக்தி, வயதாவதை நிதானப்படுத்தவும், தோல்களின் சுருக்கத்தை குறைக்கவும், பாக்டீரியா & வைரஸுக்கு எதிர்ப்பாகவும் பயன்படுகிறது.

* சீதபேதி இரத்தக் கழிச்சல் உள்ளவர்களுக்கு மங்குஸ்தான் பழத்தின் மேல் தோலை சுட்டு அல்லது பச்சையாக அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி உடனே குணமாகும். உடல் சூட்டைத் தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும்.

* வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. கண் எரிச்சலைப் போக்க கம்பியூட்டரில் வேலை செய்பவருக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும். இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.

* மூலநோயை குணப்படுத்த. நாம் உண்ணும் உணவானது செரிமானம் ஆகாமல் அசீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு சீற்றமாகி கீழ் நோக்கி மூலப் பகுதியை பாதிக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்படுகிறது. மூலநோய் விரைவில் குணமாக எளிதில் சீரணமாகக் கூடிய உணவுகளை உண்பது நல்லது. அதோடு மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

* பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப் போக்கை குறைக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது. கிடைக்கும் காலங்களில் மங்குஸ்தான் பழத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது. அல்லது மங்குஸ்தான் பழத்தின் தோலை காய வைத்து பொடிசெய்து பாலில் கலந்து மங்குஸ்தான் ரீ செய்து சாப்பிட்டு வந்தால் அதிக இரத்தப் போக்கு குறையும்.

* சிறுநீர் நன்கு வெளியேறினால் தான் உடலில் தங்கியுள்ள தேவையற்ற அசுத்த நீர் வெளியேறும். சிறுநீர் நன்கு வெளியேற மங்குஸ்தான் பழம் சிறந்த மருந்தாகும். அதுமட்டுமல்லாமல் இருமலை தடுக்கும்,சூதக வலியை குணமாக்கும், தலைவலியை போக்கும்,நாவறட்சியை தணிக்கும். மங்குஸ்தான் பழத்தில்

நீர் (ஈரப்பதம்) - 83.9 கிராம்
கொழுப்பு - 0.1
கிராம் புரதம் - 0.4 கிராம்
மாவுப் பொருள் - 14.8 கிராம்
பாஸ்பரஸ் - 15 மி.கி.
இரும்புச் சத்து - 0.2 மி.கி

மங்குஸ்தீன் ரீ: இதன் தோல் பாகத்தை இயற்கையான முறையில் காயவைத்து செய்யப்படுவதுதான் இந்த மங்குஸ்தீன் ரீ. இந்த ரீ குடிப்பதனால் 35-40 வயதுக்கு மேல் முகத்தில் விழும் சுருக்கம் தடுக்கப்படும்.