செவ்வாய், 21 செப்டம்பர், 2010

குழந்தைகளுக்கு முழங்கையில் அடிபட்டால் ? அறியவேண்டிய-7 குறிப்புகள்!!

பொதுவாக மருத்துவம் என்பது பற்றி அறிவியல்பூர்வமாக நாம் அறிந்து கொள்வது மிக அவசியம். அதுவும் நம் குழந்தைகளுக்கு என்று வரும்போது இன்னும் எச்சரிக்கை தேவை!!
குழந்தைகள் கீழே விழும்போது முழங்கை எலும்பு முறிவு ஏற்பட்டால் என்ன செய்யக்கூடாது என்ன செய்யலாம்? என்று நாம் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும்.
1.குழந்தைகளுக்கு முழங்கையில் அடிபட்டு வீக்கம், வலி காணப்பட்டால் அவசியம் எலும்பு உடைந்துள்ளதா? என்று எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்பது சிறந்தது.
2.முழங்கையில் எண்ணை, வலிக்கான களிம்புகள் போட்டு தேய்த்துவிடக் கூடாது.அப்படிச்செய்தால் முழங்கையைச் சுற்றியுள்ள தசை, சவ்வுப்பகுதிகளில் உபரியான எலும்புகள் தோன்றி முழங்கை மடக்க விடாமல் தடுக்கும். இதற்கு மயோசைடிஸ் ஆஸ்ஸிபிகன்ஸ் என்று பெயர்(Myositis ossificans) என்று பெயர்.
3.எலும்பு உடைந்திருந்தால் நாட்டு வைத்தியம் செய்யக்கூடாது. அப்படி செய்தால் கை திரும்பி இணையும் அபாயம் அதிகம்.
4.முழங்கைக்கு சற்று மேல் எலும்பு உடைந்து இருந்தாலோ அல்லது முழங்கை எலும்பு விலகி இருந்தாலோ எலும்பு மருத்துவரிடம் காண்பித்தல் அவசியம்.
5.முழங்கைக்கு சற்று மேலே உடைந்திருந்தால் பல நேரங்களில் மருத்துவரிடம் கேட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தால் அறுவை சிகிச்சை செய்து கொள்வதே மிக நல்லது.
6.முழங்கை எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் உடைந்த வித்தியாசம் தெரியாத அளவுக்கு மிகச் சரியாகப் பொறுத்த முடியும்.
7.ஏற்கெனவே முழங்கை எலும்பு உடைந்து நாட்டுக் கட்டுப் போட்டு எலும்பு தவறாக இணைந்திருந்தாலும் அதையும் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக